என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இத்தாலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலி
Byமாலை மலர்20 Aug 2018 10:12 PM GMT (Updated: 20 Aug 2018 10:19 PM GMT)
கனமழை காரணமாக இத்தாலி நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரோம் :
இத்தாலி நாட்டின் கேலாப்ரியா மாகாணத்தில் பொலினோ தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் ஒருபகுதியக ராக்னெல்லோ எனும் ஓடை உள்ளது. மலை இடுக்குளில் மிகவும் குறுகலாக சுமார் 1 கி.மீ அழத்தில் பயணிக்க கூடிய இந்த நீர் ஓடையை பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக இந்த ஓடைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த ஓடையை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலாப் பயணிகள் 8 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில், கடந்த வாரம் பாலம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி நாட்டின் கேலாப்ரியா மாகாணத்தில் பொலினோ தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் ஒருபகுதியக ராக்னெல்லோ எனும் ஓடை உள்ளது. மலை இடுக்குளில் மிகவும் குறுகலாக சுமார் 1 கி.மீ அழத்தில் பயணிக்க கூடிய இந்த நீர் ஓடையை பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக இந்த ஓடைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த ஓடையை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலாப் பயணிகள் 8 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், 18 பேர் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் அவர்களில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சுற்றுலாப் பயணிகள் யாரும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் இப்பகுதிக்கு சென்றுள்ளதால் மொத்தம் எத்தனை பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
இத்தாலியில், கடந்த வாரம் பாலம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X