search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நைஜீரியா - போகோ ஹராம் பயங்கரவதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலி
    X

    நைஜீரியா - போகோ ஹராம் பயங்கரவதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலி

    நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #BokoHaram
    அபுஜா :

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 8 ஆண்டுகளாக போகோ ஹாரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தாக்குதல் நடத்தி இதுவரை 20 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளனர்.

    இந்நிலையில், நைஜீரியாவின் போரானோ மாகாணத்தில் உள்ள அந்நாட்டு ராணுவ தளத்தை குறிவைத்து பயங்கர ஆயுதங்களுடன் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    இதில், நைஜீரிய ராணுவத்தை சேர்ந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதங்களையும் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் சூறையாடி சென்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது. #BokoHaram
    Next Story
    ×