என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துருக்கியில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து - பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு
Byமாலை மலர்9 July 2018 6:44 AM GMT (Updated: 9 July 2018 6:44 AM GMT)
துருக்கி நாட்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
அங்காரா :
பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது. அதில் 360-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
தெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் ரெயிலின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 10 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் மரணம் அடைந்தனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை தற்போது 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என அந்நாட்டின் துணை பிரதமர் ரெகேப் அக்டக் இன்று தெரிவித்துள்ளார்.
ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு துருக்கி அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது. அதில் 360-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
தெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் ரெயிலின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 10 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் மரணம் அடைந்தனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை தற்போது 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என அந்நாட்டின் துணை பிரதமர் ரெகேப் அக்டக் இன்று தெரிவித்துள்ளார்.
ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு துருக்கி அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X