search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுதமாலா எரிமலை வெடிப்பு எதிரொலி - விமான சேவை முடக்கம்
    X

    கவுதமாலா எரிமலை வெடிப்பு எதிரொலி - விமான சேவை முடக்கம்

    கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. #GautemalaVolcanoEruption #FeugoVolcano

    கவுதமாலா சிட்டி:

    கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். 

    இந்நிலையில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கவுதமாலா பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஃப்யூகோ எரிமலை மீண்டும் வெடித்து சிதறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #GuatemalaVolcanoEruption #FeugoVolcano
    Next Story
    ×