search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேஷியா சிறைச்சாலையில் மோதல் - 5 போலீசாரை கொன்ற கைதிகள்
    X

    இந்தோனேஷியா சிறைச்சாலையில் மோதல் - 5 போலீசாரை கொன்ற கைதிகள்

    இந்தோனேஷியாவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதலில் சிறையிலிருந்த கைதிகள் 5 போலீஸ் அதிகாரிகளை கொன்று, ஒரு போலீஸ் அதிகாரியை பிணைக்கைதியாக சிறை பிடித்து வைத்துள்ளனர். #KilledFivePolice #Hostage #JailClash
    ஜகர்தா:

    இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பார்வையாளர்கள் எடுத்து வரும் வெளி உணவுகளை போலீசார் சோதனை செய்துள்ளனர். இதற்கு சிறைக்கைதிகள் சிலர் கடும் எதிப்பு தெரிவித்துள்ளார்கள்.

    இதைத்தொடர்ந்து, போலீஸ் மற்றும் கைதிகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. சிறைக்கைதிகள் கூட்டாக சேர்ந்து 5 போலீஸ் அதிகாரிகளை கொலை செய்துள்ளனர். மேலும், ஒரு போலீஸ் அதிகாரியை பிணைக்கைதியாக சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.


    போலீசார் வைத்திருந்த ஆயுதங்களையும் கைதிகள் கைப்பற்றி வைத்துள்ளனர். இந்நிலையில், சிறைச்சாலை மோதலை கட்டுப்படுத்த இந்தோனேஷிய போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் மோதலால் வெளியாட்கள் யாரும் சிறைச்சாலை அருகே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #KilledFivePolice #Hostage #JailClash
    Next Story
    ×