என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கயானாவில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள் - வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
Byமாலை மலர்29 Jun 2017 3:39 AM GMT (Updated: 29 Jun 2017 4:35 AM GMT)
தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
கெய்னே:
தொலைத்தொடர்பு, டிடிஹெச் (DTH) சேவை மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 செயற்கைகோளை லத்தீன் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து, ஏரியன்-5 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது.
இன்று அதிகாலை 2.29 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. பின்னர் ஜிசாட்-17 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்-17 செலுத்தப்பட்டது.
ஜிசாட்-17 செயற்கைகோள் 3,477 கிலோ எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இது இந்தியாவின் 18வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X