என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூக்கத்தில் நீதிபதி தீர்ப்பளித்ததால் மேல்கோர்ட்டில் குற்றவாளி விடுதலை
கோபன்ஹகன்:
‘தூங்காதே தம்பி தூங்காதே’ ‘சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’ நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் தானும் கெட்டதுடன் நாட்டையும் கெடுத்து விட்டார்’ என பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதற்கு ஏற்ப ஒரு சம்பவம் டென்மார்க் நாட்டில் நடந்துள்ளது.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹகனை சேர்ந்த ஒரு நபர் தனது 14 வயது மகளை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை கோபன்ஹகன் ஐகோர்ட்டில் நடந்தது. அதில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி மேல்கோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்போது வழக்கு விசாரணையின் போது எனது தரப்பு வக்கீலின் வாதத்தை கேட்காமல் ஒரு நீதிபதி தூங்கி கொண்டே இருந்தார்.
இதனால் தவறாக தீர்ப்பளித்து விட்டார் எனக்கூறி அதற்கான வீடியோ ஆதாரத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
அதை போட்டுப்பார்த்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்‘ அவரது குற்றச்சாட்டை உறுதி செய்தனர். எனவே கற்பழிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அந்த நபர் விடுதலை செய்யப்பட்டார். 6 நீதிபதிகளில் 5 பேர் இவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்