என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரான்: இரு ரெயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 15 பேர் பலி
Byமாலை மலர்25 Nov 2016 8:46 AM GMT (Updated: 25 Nov 2016 10:29 AM GMT)
ஈரான் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள செம்னான் மாகாணத்தில் இன்று இரு ரெயில்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் பதினைந்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
டெஹ்ரான்:
ஈரான் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள செம்னான் மாகாணத்திற்குட்பட்ட ஷரவுட் நகரையொட்டியுள்ள ஹப்-கான் ரெயில் நிலையம் வழியாக (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 7.40 மணியளவில் எதிரெதிர் திசைகளை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இரு ரெயில்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே தண்டவாளத்தில் இணைந்து நேருக்குநேராக மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் இரு ரெயில்களின் எஞ்சின் பெட்டிகள் மற்றும் சில பயணிகள் பெட்டிகள் தீபிடித்து எரியத் தொடங்கின. இந்த கோரவிபத்தில் பதினைந்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தின் பலி எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஈரான் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள செம்னான் மாகாணத்திற்குட்பட்ட ஷரவுட் நகரையொட்டியுள்ள ஹப்-கான் ரெயில் நிலையம் வழியாக (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 7.40 மணியளவில் எதிரெதிர் திசைகளை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இரு ரெயில்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே தண்டவாளத்தில் இணைந்து நேருக்குநேராக மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் இரு ரெயில்களின் எஞ்சின் பெட்டிகள் மற்றும் சில பயணிகள் பெட்டிகள் தீபிடித்து எரியத் தொடங்கின. இந்த கோரவிபத்தில் பதினைந்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தின் பலி எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X