என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியாவில் வெள்ளம்-நிலச்சரிவு: உயிரிழப்பு 26 ஆக உயர்வு
Byமாலை மலர்22 Sep 2016 11:53 AM GMT (Updated: 22 Sep 2016 11:54 AM GMT)
இந்தோனேசியாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கருட், சுமேடாங் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் சிக்கி 8 மாத கைக்குழந்தை உள்பட 6 குழந்தைகளும், 7 பெண்களும் உயிரிழந்தனர். சுமேடாங் மாவட்டத்தில் ஆறுபேர் பலியாகினர். காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கையில் பேரிடர் நிவாரணப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மேலும் சிலரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 19 பேரைக் காணவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
வீடுகளை இழந்தவர்களுக்காக அரசு சார்பில் தற்காலிக கூடாரங்கள், தற்காலிக சமையலறை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூக அமைப்புகள் உதவி செய்கின்றன.
இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கருட், சுமேடாங் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் சிக்கி 8 மாத கைக்குழந்தை உள்பட 6 குழந்தைகளும், 7 பெண்களும் உயிரிழந்தனர். சுமேடாங் மாவட்டத்தில் ஆறுபேர் பலியாகினர். காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கையில் பேரிடர் நிவாரணப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மேலும் சிலரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 19 பேரைக் காணவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
வீடுகளை இழந்தவர்களுக்காக அரசு சார்பில் தற்காலிக கூடாரங்கள், தற்காலிக சமையலறை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூக அமைப்புகள் உதவி செய்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X