என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை போட்டுத் தள்ளியது சுலபமான காரியம் அல்ல: ஹிலாரி கிளிண்டன்
Byமாலை மலர்9 Sep 2016 8:07 AM GMT (Updated: 9 Sep 2016 8:08 AM GMT)
பாகிஸ்தானில் ராணுவ அதிகாரிகளின் வீடுகள் நிறைந்த அபோட்டாபாத் நகருக்குள் புகுந்து சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க சீல் படையினர் சுட்டுக் கொன்றது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல என அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளரும், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன்:
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த 'நேவி சீல்' என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஒசாமாவின் பிரேதத்தை கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் நான் அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்து இருந்திருந்தால் ஒசாமா பின்லேடனை எப்போதோ உயிருடன் பிடித்து இருப்பேன் என சமீபத்தில் தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயக கட்சிவேட்பாளரும், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன், பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை போட்டுத் தள்ளியது சுலபமான காரியம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்குள் அமெரிக்க சீல் படையினர் புகுந்து தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றபோது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஆலோசனை வழங்கிய சிறியகுழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன்.
அந்த நடவடிக்கை அத்தனை எளிதான ஒரு தேர்வாக அமையவில்லை. இதுபோன்ற முடிவுகள் வெகு எளிதாக எடுக்கப்படுவதும் இல்லை. நமக்கு கிடைத்த உளவுத்தகவல்கள் சரியானவைதானா? இல்லையா? என்பதிலும், அந்த தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதலை நடத்தலாமா? என்பதிலும் இருவேறு நிலைப்பாடுகள் இருந்தன. இதில் தெளிவான தேர்வு என்ற முடிவை எடுப்பதில் சிரமம் இருந்தது.
இத்தகையை நிலைப்பாடு சூழும் வேளைகளில்தான் நாட்டின் தலைமைப் பதவியில் இருக்கும் ஒருவர் கருத்துகளின் அடிப்படையில் சிறந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளது. பல கேள்விகளை எழுப்பி, கிடைக்கும் பதில்களை ஆய்வுசெய்து செயலாற்ற வேண்டியுள்ளது.
பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை தீர்த்துக் கட்டுவது தொடர்பாக எங்களது ஆலோசனை பலமணி நேரம் நீடித்தது. அதிபர் பராக் ஒபாமா ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்டார். இந்தப்பணி அவ்வளவு சாதாரணமானது அல்ல என்பதால் எங்களுக்குள் சில கருத்துபேதம் இருந்தது. ஆனால், தாக்குதலை நடத்தலாம் என நான் ஆதரவு தெரிவித்தேன். இந்த நடவடிக்கையின் மூலம் நமது பலம் என்னவென்பதை நாமே அறிந்து கொள்ள வழிவகுக்கும் என தீர்மானித்தேன்.
இதையடுத்து, பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகருக்குள் நமது சீல் படையினர் நுழைந்தனர். எனது வாழ்க்கையின் பரபரப்பான அந்த 30 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நானும் அமர்ந்து நமது படையினர் பின்லேடனை சுட்டுக்கொன்ற பரபரப்பான அந்த நேரடி வீடியோவை பார்த்தேன்.
நமது வீரர்கள் சென்ற ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து செயலிழந்து போனதும், இன்னொரு ஹெலிகாப்டர் விரைந்துவந்து உதவியதும் வெற்றிகரமாக பின்லேடனை சுட்டுக் கொன்ற நமது சீல் படையினர் பின்லேடனின் பிரேதத்துடன் அதில் ஏற்றி அங்கிருந்து தப்பியதும் சுலபமான காரியம் அல்ல.
ஆனால், நமது கவுரவத்துக்குரிய ராணுவ நடவடிக்கைகளில் சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் கூறுவதுபோல் தீவிரவாதிகளின் குடும்பத்தினரை சித்ரவதை செய்வது, கொல்வது போன்ற நமது சட்டத்துக்கு புறம்பான காரியங்களுக்கு எல்லாம் இடமே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த 'நேவி சீல்' என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஒசாமாவின் பிரேதத்தை கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் நான் அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்து இருந்திருந்தால் ஒசாமா பின்லேடனை எப்போதோ உயிருடன் பிடித்து இருப்பேன் என சமீபத்தில் தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயக கட்சிவேட்பாளரும், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன், பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை போட்டுத் தள்ளியது சுலபமான காரியம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்குள் அமெரிக்க சீல் படையினர் புகுந்து தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றபோது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஆலோசனை வழங்கிய சிறியகுழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன்.
அந்த நடவடிக்கை அத்தனை எளிதான ஒரு தேர்வாக அமையவில்லை. இதுபோன்ற முடிவுகள் வெகு எளிதாக எடுக்கப்படுவதும் இல்லை. நமக்கு கிடைத்த உளவுத்தகவல்கள் சரியானவைதானா? இல்லையா? என்பதிலும், அந்த தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதலை நடத்தலாமா? என்பதிலும் இருவேறு நிலைப்பாடுகள் இருந்தன. இதில் தெளிவான தேர்வு என்ற முடிவை எடுப்பதில் சிரமம் இருந்தது.
இத்தகையை நிலைப்பாடு சூழும் வேளைகளில்தான் நாட்டின் தலைமைப் பதவியில் இருக்கும் ஒருவர் கருத்துகளின் அடிப்படையில் சிறந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளது. பல கேள்விகளை எழுப்பி, கிடைக்கும் பதில்களை ஆய்வுசெய்து செயலாற்ற வேண்டியுள்ளது.
பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை தீர்த்துக் கட்டுவது தொடர்பாக எங்களது ஆலோசனை பலமணி நேரம் நீடித்தது. அதிபர் பராக் ஒபாமா ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்டார். இந்தப்பணி அவ்வளவு சாதாரணமானது அல்ல என்பதால் எங்களுக்குள் சில கருத்துபேதம் இருந்தது. ஆனால், தாக்குதலை நடத்தலாம் என நான் ஆதரவு தெரிவித்தேன். இந்த நடவடிக்கையின் மூலம் நமது பலம் என்னவென்பதை நாமே அறிந்து கொள்ள வழிவகுக்கும் என தீர்மானித்தேன்.
இதையடுத்து, பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகருக்குள் நமது சீல் படையினர் நுழைந்தனர். எனது வாழ்க்கையின் பரபரப்பான அந்த 30 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நானும் அமர்ந்து நமது படையினர் பின்லேடனை சுட்டுக்கொன்ற பரபரப்பான அந்த நேரடி வீடியோவை பார்த்தேன்.
நமது வீரர்கள் சென்ற ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து செயலிழந்து போனதும், இன்னொரு ஹெலிகாப்டர் விரைந்துவந்து உதவியதும் வெற்றிகரமாக பின்லேடனை சுட்டுக் கொன்ற நமது சீல் படையினர் பின்லேடனின் பிரேதத்துடன் அதில் ஏற்றி அங்கிருந்து தப்பியதும் சுலபமான காரியம் அல்ல.
ஆனால், நமது கவுரவத்துக்குரிய ராணுவ நடவடிக்கைகளில் சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் கூறுவதுபோல் தீவிரவாதிகளின் குடும்பத்தினரை சித்ரவதை செய்வது, கொல்வது போன்ற நமது சட்டத்துக்கு புறம்பான காரியங்களுக்கு எல்லாம் இடமே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X