என் மலர்tooltip icon

    உலகம்

    • 2011இல் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் நடந்த அணுசக்தி விபத்தை குறிப்பிட்டார்.
    • இஸ்ரேலிய தாக்குதல் செர்னோபில் பாணி பேரழிவிற்கு வழிவகுக்கும்.

    ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

    ஈரான் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை அறிவித்தது பதட்டங்களை அதிகரித்தது.

    இந்நிலையில் மாஸ்கோவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "இந்த கடினமான சூழ்நிலைகளில் அமெரிக்க இராணுவத் தலையீட்டைத் தவிர்க்குமாறு வாஷிங்டனை நாங்கள் வலுவாக எச்சரிக்கிறோம்.

    இது உண்மையிலேயே எதிர்பாராத எதிர்மறை விளைவுகளைக் கொண்ட மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்" என்று கூறினார்.

    முன்னதாக, ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடி இராணுவ உதவி வழங்குவதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்.

    ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் உலகம் ஒரு பெரிய பேரழிவின் விளிம்பில் உள்ளது என்று ஜகரோவா கவலை தெரிவித்தார்.

     2011இல் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் நடந்த அணுசக்தி விபத்தை குறிப்பிட்ட ஜகரோவா, ஈரானில் உள்ள புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் செர்னோபில் பாணி பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று ரஷிய அணுசக்தி தலைவர் எச்சரித்துள்ளார். புஷேர் அணுமின் நிலையத்தை ரஷியாவே கட்டித் தந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் ஈரான் பிரச்சனை தொடர்பாக தொலைபேசியில் பேசினார்.

    மேலும் இஸ்ரேல் - ஈரான் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி மூலம் மத்தியஸ்தம் செய்ய புதின் முன்வந்தார். ஆனால் டிரம்ப் அந்த வாய்ப்பை நிராகரித்தார். "முதலில் ரஷியாவில் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கவும்" என்று டிரம்ப் புதினிடம் கூறியதாக கூறப்படுகிறது. 

    • சியோனிஸ்டுகளும், பின்கதவு சக்திகளும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதற்கு முழுப் பொறுப்பாவார்கள்.
    • ஈரானும் வடகொரியாவும் 1973 முதல் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன.

    இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள ஈரானுக்கு வட கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    மத்திய ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் அதிகரித்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக வட கொரியாவின் அரசு ஊடகமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது.

    "இன்று உலகம் காணும் நிகழ்வுகள், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இஸ்ரேல், இஸ்ரேல் மத்திய கிழக்கின் அமைதியை பாதித்த புற்றுநோய்.. ஈரானுக்கு வட கொரியா ஆதரவு என்பதையும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் முக்கிய குற்றவாளி என்பதையும் தெளிவாக நிரூபிக்கிறது" என்று அந்த அதிகாரி கூறியதாக KCNA தெரிவித்துள்ளது.

    "மத்திய ஆசியாவில் ஒரு புதிய போரை கொண்டு வந்த சியோனிஸ்டுகளும், அவர்களை ஆர்வத்துடன் பாதுகாத்து ஆதரிக்கும் பின்கதவு சக்திகளும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதற்கு முழுப் பொறுப்பாவார்கள் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

    இஸ்ரேலுக்கு எதிரான வடகொரியாவின் அறிக்கை, ஈரானுடனான அதன் நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கிறது. ஈரானும் வடகொரியாவும் 1973 முதல் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன.

    ஈரானை போல வடகொரியாவும் அதன் ஆயுதங்கள் மற்றும் அணுசக்தித் திட்டங்கள் காரணமாக அமெரிக்கா மேற்கு நாடுகளால் தொடர்ந்து தடைகளுக்கு இலக்காகி வரும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக்டாக் செயலியை நிர்வகித்து வருகிறது.
    • அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தினர்.

    வாஷிங்டன்:

    டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.

    சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடை விதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    இதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என தெரிவித்தது.

    அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை மூன்றாவது முறையாக மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    • ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் மருத்துவமனை சேதம்.
    • ஈரானில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டை 7ஆவது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ஈரானில் உள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தியது. இந்த அணு உலையில் ரஷியாவைச் சேர்ந்த நிபுணர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் அணுஉலை மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ரஷியா வலியுறுத்தியுள்ளது.

    இரண்டு நாடுகளும் மாறிமாறி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் சேதத்தை சந்தித்து வருகின்றன.

    இந்த நிலையில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை இருக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதன் மறைமுக அர்த்தம் அவரை வீழ்த்துவது.

    இந்த கருத்தை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் புறந்தள்ளிவிடவில்லை. "அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இது தொடர்பாக மீடியாவில் பேசுவது சிறந்ததாக இருக்காது. இஸ்ரேல் ராணுவத்திடம், ஈரான் அதிகாரத்தில் யாருக்கும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் தன்மை இல்லை என அறிவுறுத்தியுள்ளேன். நான் பேசாமல் இருக்க விரும்புகிறேன். நீங்கள் நடவடிக்கையை பார்ப்பீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம் காமேனிக்கு இஸ்ரேல் குறி வைக்கலாம் எனத் தெரிகிறது.

    முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு காமேனி "ஈரான் ஒற்றுமையாக உள்ளது. ஒருபோதும் சரணடையமாட்டோம். அமெரிக்கா தலையீடு செய்தால் சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனத் தெரிவித்திருந்தார்.

    இஸ்ரேல் உடன் இணைந்து தாக்குதல் நடத்த டொனால்டு டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டை மேலும் மோசமான நிலையை எட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    • இந்தியர்களுக்கு சொந்தமான 1194 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • ஒருங்கிணைந்த மொத்த வருமானம் 72.17 பில்லியன் பவுண்ட் ஆக அதிகரிப்பு.

    பிரிட்டனில் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 23 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து பிராணட் தோர்ன்டன் என்ற உலகளாவிய நிதி ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட இந்தியா மீட்ஸ் பிரிட்டைன் டிராக்கர் (India Meets Britain Tracker) வருடாந்திர ஆய்வறிக்கை மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் இந்த ஆண்டு 23 சதவீதம் உயர்ந்து 1,194 ஆக உள்ளது. ஒருங்கிணைந்த வருமானம் முந்தைய ஆண்டு 68.09 பில்லியன் பவுண்ட் ஆக இருந்த நிலையில், 2024-ல் 72.14 பில்லியன் பவுண்ட் ஆக அதிகரித்துள்ளது.

    இங்கிலாந்து முழுவதும் 1,26,720 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு 8 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

    விப்ரோ ஐ.டி. சர்வீசஸ் நிறுவனம் 448 சதவீத வருவாய் வளர்ச்சியை பெற்றுள்ளது. ஜோஹோ கார்பரேசன் லிமிடெட்டின் வளர்ச்சி 197 சதவீதம் அதிகரித்துள்ளது.

    • உக்ரைன்- ரஷியா இடையே இரண்டு முறை நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
    • பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்படவில்லை.

    உக்ரைன்- ரஷியா இடையில் 3 வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு பக்கமும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் ரஷியா போர் நிறுத்தத்தை விரும்பவில்லை.

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுக்க உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷியா சம்மதம் தெரிவித்தது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் ஏற்படவில்லை.

    பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்த நிலையில், 142 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட ரஷியாவுக்கு உலக நாடுகள் இன்னும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

    "இந்த தாக்குதல் ரஷியா போர் நிறுத்தத்தை நிராகரித்து, கொலையை தேர்வு செய்கிறது என்பதை உலகிற்கு ஞாபகப்படுத்துகிறது" என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், போரின் உண்மையான இழப்பை உணர ரஷியாவு்ககு நெருக்கடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறிய ஆதரவு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    • ஸ்டார்ஷிப் என்பது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும்.
    • ஸ்பேஸ்எக்ஸ் அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமானது.

    அமெரிக்காவின் டெக்சாஸில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பு உருவானது

    ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும்.

    அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வியடைவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு பலமுறை ராக்கெட் ஏவுதல் சோதனைகள் தோல்வியடைந்துள்ளன. 

    • இஸ்ரேல் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிக்கை
    • ஈரான் ஏராளமான சிக்கலில் சிக்கியுள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இஸ்ரேல்- ஈரான் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

    இதற்கு ஈரானின் உச்ச தலைவர் அபயதுல்லா அலி காமேனி, "ஈரான் ஒருபோதும் சரண் அடையாது. இஸ்ரேல்- ஈரான் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? என்ற கேள்விக்கு டொனால் டிரம்ப் "நான் அதை செய்யலாம். ஒருவேளை செய்யாமல் இருக்கலாம். நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் ஏராளமான சிக்கலில் சிக்கியுள்ளது." எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஈரானின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போர் விமானங்கள், கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

    இந்த வார இறுதியில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும் ஆனால் இறுதிமுடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இஸ்ரேலும் ஈரானும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது.

    ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் 90 சதவீதத்தை எட்டி விட்டதாகவும், இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி இஸ்ரேல், ஈரான் மீது கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

    தொடர்ந்து 7 ஆவது நாளாக இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது. அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

    இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனையின் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மருத்துவமனையில் சில பகுதிகள் சேதமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    • தீவு நாடான இந்தோனேசியாவில் அதிக அளவிலான எரிமலைகள் உள்ளன.
    • புகை மண்டலம் காரணமாக இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட இருந்த 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகின.

    ஜகர்த்தா:

    இந்தோனேசியாவில் லகி-லகி எரிமலை வெடித்து சிதறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். சர்வதேச விமானங்கள் ரத்தாகின.

    பசிபிக் நெருப்பு வளையம் என்பது உலகின் மிகப்பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலை சுற்றி கடலுக்கு அடியிலும், நிலத்திலும் இருக்கும் நிலத்தட்டுகளில் அமைந்திருக்கும் எரிமலைகளில் வளைவான தொடராகும்.

    இந்த பகுதியில் அமைந்திருக்கும் எரிமலைகள் அவ்வப்போது வெடிப்பதால் சுனாமி மற்றும் பூகம்பம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள தீவு நாடான இந்தோனேசியாவிலும் அதிக அளவிலான எரிமலைகள் உள்ளன.

    ஆங்காங்கே சிதறி கிடக்கும் தீவு நாடான இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கூட்டத்தில் பாலி தீவு அமைந்துள்ளது. கண்ணை கொள்ளையடிக்கும் கடற்கரைகள், பசுமையான மலைகள், வாயை பிளக்க வைக்கும் பள்ளத்தாக்குகள் என இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவில் 1,500 மீட்டர் உயர லிவோட்பி என்ற எரிமலை உள்ளது.

    உள்ளூர் மக்களால் லகி-லகி என்று அழைக்கப்படும் இந்த அதிபயங்கர எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது. இது அங்குள்ள உள்ளூர்வாசிகளை மட்டுமின்றி சுற்றுலாவுக்காக வரும் வெளிநாட்டு பயணிகளை கலங்க செய்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்றும் இந்த லகி-லகி எரிமலை வெடித்து சிதறியது. அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிமலை காரணமாக வானில் சுமார் 5 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. மேலும் சுமார் 10 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு புகை மண்டலமாக மேலழுப்பி வானில் கலந்தது. இது அங்கிருந்தவர்களுக்கு சிவப்பு நிற குடை காளான்போல காட்சியளித்தது.

    இந்த புகை மண்டலம் காரணமாக இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட இருந்த 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகின. மேலும் பாலி தீவுக்கு விமான சேவை தடைப்பட்டது. இதனால் விமான பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றி வசித்து வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

    • திபெத்திய பவுத்த தலைவரான 14-வது தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாள் ஜூலை மாதம் 6-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
    • தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து இரு அவைகளில் உள்ள எம்.பி.கள் வாக்களிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி டிரம்புக்கு இந்த தீர்மானம் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

    வாஷிங்டன்:

    திபெத்திய பவுத்த தலைவரான 14-வது தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாள் ஜூலை மாதம் 6-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்தநிலையில் தலாய் லாமாவின் பிறந்தநாளை கருணை தினமாக கொண்டாட அறிவிக்கக்கோரி அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஆளும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் கட்சி பாகுபாடின்றி இந்த தீர்மானத்தை முன்மொழிந்தனர். இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து இரு அவைகளில் உள்ள எம்.பி.கள் வாக்களிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி டிரம்புக்கு இந்த தீர்மானம் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். தொடர்ந்து தலாய் லாமாவின் பிறந்தநாளான ஜூலை 6-ந் தேதி அமெரிக்காவில் கருணை தினமாக அனுசரிக்கப்படும். இந்த தீர்மானம் வெற்றிப்பெற்று அமல்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இது அயர்லாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய லாட்டரி வெற்றியாகும்.
    • பல பிரபலங்களை விடவும் அந்த நபர் பணக்காரர் ஆகியுள்ளார்.

    ஒரே ஒரு லாட்டரி டிக்கெட்டில் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் பரிசான ரூ.2,120 கோடி (208 மில்லியன் பவுண்டுகள்) தொகையை அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் வென்றுள்ளார். இது அயர்லாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய லாட்டரி வெற்றியாகும்.

    இந்த வெற்றி மூலம், கால்பந்து வீரர் ஹாரி கேன் (ரூ.1,150 கோடி) மற்றும் பாப் பாடகி துவா லிபா (ரூ.1,100 கோடி) போன்ற பல பிரபலங்களை விடவும் அந்த நபர் பணக்காரர் ஆகியுள்ளார்.

    அயர்லாந்து தேசிய லாட்டரி, வெற்றியாளர் தனது டிக்கெட்டைப் பத்திரப்படுத்தி, லாட்டரி தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த வெற்றியாளர் ஐரிஷ் நாட்டின் 18வது யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் வெற்றியாளர் ஆவார். வெற்றியாளரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    ×