என் மலர்tooltip icon

    உலகம்

    • ஈரான் தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையான Fattah-1 ஐ 2023 இல் அறிமுகப்படுத்தியது.
    • IRGC இதை "இஸ்ரேலிய-ஸ்ட்ரைக்கர்" என்று விவரிக்கிறது.

    இஸ்ரேலுடனான நடந்து வரும் போர் குறித்து ஈரான் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    நேற்று முன் தினம் தாக்குதல்களில் இஸ்ரேலுக்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிக்கைப்படி, 11வது கட்ட தாக்குதல்கள் "ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" இன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை "Fattah-1" பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

    "ஈரானியப் படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் வான்வெளியின் (இஸ்ரேல்) மீது முழு கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளன" என்று IRGC தெரிவித்துள்ளது.

    தற்போதைய மோதலில் ஈரான் இந்த வகை ஏவுகணையைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை. அக்டோபர் 1, 2024 அன்று "ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 2" இல் இஸ்ரேலுக்கு எதிராக Fattah-1 ஏவுகணைகளை ஈரான் ஏவியிருந்தது.

     ஈரான் தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையான Fattah-1 ஐ 2023 இல் அறிமுகப்படுத்தியது.

    இஸ்ரேலின் இரும்பு டோம் போன்ற மிகவும் மேம்பட்ட ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைக் கூட தோற்கடிக்கும் வகையில் Fattah-1 வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    IRGC இதை "இஸ்ரேலிய-ஸ்ட்ரைக்கர்" என்று விவரிக்கிறது. இந்த ஏவுகணை 12 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 1,400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.

    இது திட எரிபொருளில் இயங்குகிறது மற்றும் 200 கிலோகிராம் வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

    Fattah-1, மணிக்கு 17,900 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனம் (HGV) முனையைக் கொண்டுள்ளது.

    இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் காற்றில் இருக்கும்போது அவற்றின் பாதையை மாற்றும் திறனைக் கொண்டுள்ளன.

    இந்த தனித்துவமான திறன் அவற்றைக் கண்டறிந்து இடைமறிப்பதை கடினமாக்குகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இந்த ஏவுகணைகள் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கின்றன, இது மணிக்கு தோராயமாக 6,100 கிலோமீட்டர் ஆகும். 

    • ஜூன் 17 அன்று வடக்கு ஈரானில் இருந்து ஆர்மீனியாவுக்கு வந்த 110 இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
    • உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

    ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் சூழல் அதிகரித்த நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய அரசு "ஆபரேஷன் சிந்து"-ஐ தொடங்கியது.

    தெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜூன் 17 அன்று வடக்கு ஈரானில் இருந்து ஆர்மீனியாவுக்கு வந்த 110 இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

    அவர்கள் அனைவரும் ஆர்மீனியாவின் தலைநகரான யெரெவனில் இருந்து சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு நேற்று (ஜூன் 18) இரவு புறப்பட்டனர். இந்த மாணவர்கள் குழு இன்று (ஜூன் 19) காலை புது டெல்லி விமான நிலையத்தை அடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே அங்குள்ள இந்தியர்களை அறிவுறுத்தி உள்ளது.

    • கான் யூனிஸில் உள்ள ஒரு முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
    • மே மாத இறுதியில் உதவி விநியோகங்கள் மீண்டும் தொடங்கியதிலிருந்து, உணவு உதவி பெற முயன்ற 397 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    ஈரானுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    வீடுகள் மீதும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 21 பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸில் உள்ள ஒரு முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

    மத்திய காசாவில் உள்ள சலாஹுதீன் சாலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி லாரிகளுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் பதினான்கு பேர் கொல்லப்பட்டனர்.

    உணவுக்காகக் காத்திருந்தவர்களின் இறப்புகள் குறித்து விசாரித்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    மே மாத இறுதியில் உதவி விநியோகங்கள் மீண்டும் தொடங்கியதிலிருந்து, உணவு உதவி பெற முயன்ற 397 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,000க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

    அக்டோபர் 2023 முதல் தொடங்கிய காசா போர், கிட்டத்தட்ட 55,600 பாலஸ்தீனிய உயிர்களைப் பலிவாங்கி, பெரும்பான்மையான மக்களை இடம்பெயரச் செய்துள்ளதுடன், கடுமையான பட்டினி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. 

    • ஜாகோபாபாத்தில் உள்ள கால்நடை சந்தை அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
    • ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜாகோபாபாத் மாவட்டத்தில், பலூசிஸ்தானை ஒட்டியுள்ள பகுதியில், நேற்று (புதன்கிழமை) ரெயில்வே தண்டவாளம் அருகே குண்டுவெடித்ததில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

    ஜாகோபாபாத்தில் உள்ள கால்நடை சந்தை அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதனால் குவெட்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரெயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து, வெடிவிபத்தின் தன்மை மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப மாதங்களில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். கடந்த மார்ச் மாதம், குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்தபோது, பலூசிஸ்தான் மாகாணத்தின் போலன் மாவட்டத்தில் இந்த ரெயில் தாக்கப்பட்டு கடத்தப்பட்டது. அந்த சம்பவத்திற்கு பலூசிஸ்ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.தான் விடுதலை இராணுவம் (BLA) பொறுப்பேற்றது. பின்னர் ராணுவ நடவடிக்கை மூலம் ரெயில் மீட்கப்பட்டது. 

    • பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்புடன் மதிய உணவு அருந்தினார்.
    • எனக்குப் பாகிஸ்தானைப் பிடிக்கும்.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

    இன்று (ஜூன் 18), பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் தனது ஐந்து நாள் அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்புடன் மதிய உணவு அருந்தினார்.

    இந்த சந்திப்புக்குப் பிறகு வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரைத் தான் நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.

    டிரம்ப் தனது உரையில், "இந்தியா-பாகிஸ்தான் போரை நான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தினேன். எனக்குப் பாகிஸ்தானைப் பிடிக்கும். மோடி சிறந்த மனிதர் என நினைக்கிறேன். அவருடன் நேற்று இரவு நான் பேசினேன்.

    மோடியுடன் நாங்கள் வணிக ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். பாகிஸ்தான் போரை நிறுத்துவதற்கு அசீம் முனீர் முக்கிய காரணம். இதேபோன்று இந்தியா தரப்பில் போரை நிறுத்த மோடி முக்கியமானவர். போரை நிறுத்த இவர்கள் இருவருமே செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர். இரு முக்கிய அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நான் போரை நிறுத்தியுள்ளேன்," என்று குறிப்பிட்டார்.

    முன்னதாக, 'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்தில் எந்தவித மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என்றும், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே போர் நிறுத்தம் செய்யப்பட்டது, இதில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி டிரம்ப்பிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஈரான் ஒருபோதும் சரண் அடையாது.
    • இஸ்ரேல் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்- காமேனி

    இஸ்ரேல்- ஈரான் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

    இதற்கு ஈரானின் உச்ச தலைவர் அபயதுல்லா அலி காமேனி, "ஈரான் ஒருபோதும் சரண் அடையாது. இஸ்ரேல்- ஈரான் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? என்ற கேள்விக்கு டொனால் டிரம்ப் "நான் அதை செய்யலாம். ஒருவேளை செய்யாமல் இருக்கலாம். நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் ஏராளமான சிக்கலில் சிக்கியுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

    • கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடந்தது.
    • ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    ஒட்டாவா:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    பயணத்தின் முதல் கட்டமாக அவர் கடந்த 15-ம் தேதி சைப்ரஸ் சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் மோடி சந்தித்தார்.

    இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நேற்று நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

    இந்நிலையில், கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு குரோஷியா சென்றடைந்தார். ஜாக்ரெப் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    குரோஷியா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பிளென்கோவிக்கை சந்திக்கிறார்.

    இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    • ஈரான் ஒற்றுமையாக நிற்கிறது.
    • சரிசெய்ய முடியாத அளவிற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

    ஈரான்- இஸ்ரேல் இடையிலான சண்டை போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்.

    நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஈரான் நாட்டின் உச்சபட்ச அதிகார தலைவரான அயதுல்லா அலி காமேனி "ஈரான் ஒருபோதும் சரணடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அயதுல்லா அலி காமேனி "இந்த விவகாரத்தில் ஈரான் ஒற்றுமையாக நிற்கிறது. ஒருபோதும் ஈரான் சரணடையாது. அமெரிக்கா ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால், சரிசெய்ய முடியாத அளவிற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • ஈரான் மீதான தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என அமெரிக்கா முதலில் விலகி நிற்பதாக தெரிவித்தது.
    • பின்னர் ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    இஸ்ரேல்- ஈரான் இடையே கடந்த சில தினங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. ஈரானின் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் தலைநகர், மொசாட் தலைமையகம் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    நேற்றிரவு உச்சக்கட்டமாக ஈரான், ஹைபர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்மூலம் போர் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோம் என ஈரான் நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்காவின் எந்தவொரு தலையீடும் பிராந்தியத்தில் போரை தூண்டுவதாக இருக்கும் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    • பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த உலகளாவிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
    • பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

    கனடாவில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-

    காஷ்மீரின் பகல்காம் மீதான பயங்கரவாத தாக்குதல் ஒவ்வொரு இந்தியரின் ஆன்மா, அடையாளம் மற்றும் கண்ணியத்தின் மீதான தாக்குதல் ஆகும். இது முழு மனிதகுலத்தின் மீதான தாக்குதல் ஆகும்.

    பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த உலகளாவிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை ஊக்குவிக்க ஜி-7 தலைவர்களை வலியுறுத்துகிறேன். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி. அதற்கு எதிராக ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் அனைத்து நாடுகளுக்கும் நிற்கிறது. உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்காக, உலகம் அதன் அணுகுமுறையில் தெளிவாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். நமது சொந்த விருப் பங்களின் அடிப்படையில் அனைத்து வகையான தடைகளையும் விதிக்க முயன்றாலும் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் நாடுகளுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் இரட்டை நிலைப்பாடுகளை பயன்படுத்த கூடாது.

    உலகளாவிய தெற்கு நாடுகள் நிச்சயமற்ற தன்மை மற்றும் மோதல்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உணவு, எரிபொருள், உரம் மற்றும் நிதி தொடர்பான நெருக்கடிகளால் முதலில் பாதிக்கப்படுவது அவர்கள்தான். தெற்கு நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகளை உலக அரங்கிற்கு கொண்டு வருவதை தனது பொறுப்பாக இந்தியா கருதுகிறது. இந்த பிரச்சினையை ஜி-7 நாடுகள் இன்னும் தீவிர மாகக் கையாள வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா-கனடா உறவு மிகவும் முக்கியமானது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் வெற்றி அளிக்கும் ஒத்துழைப்பை அடைய இருதரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.

    மேலும் இந்தியா-கனடா இடையே தூதரக உறவை பலப்படுத்த இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்தபோது இந்தியா-கனடா இடையே யான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.

    கனடா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றார்.

    • ஈரான் உச்சபட்ச தலைவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது தெரியும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
    • ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்.

    ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் 90 சதவீதத்தை எட்டி விட்டதாகவும், இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி இஸ்ரேல், ஈரான் மீது கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

    இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது. அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

    இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தார்.

    இது தொடர்பாக டிரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தள பதிவில், "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" என்று தெரிவித்தார்.

    அதேபோல் சதாம் உசே னுக்கு ஏற்பட்ட நிலைமை அயதுல்லா அலி காமெனிக்கு ஏற்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் டிரம்பின் மிரட்டலுக்கு அடியபணிய மாட்டோம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "போர் தொடங்கிவிட்டது. பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு (இஸ்ரேல்) நாம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம்" என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல்-ஈரான் 6-வது நாளாக பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன. ஈரான் தலைநகர் டெக்ரானை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. டெக்ரானுக்கு அருகில் உள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த ஏவுகணை உற்பத்தி நிலையம் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பிற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேபோல் டெக்ரானிலும், தலைநகருக்கு மேற்கே உள்ள கராஜ் நகரத்திலும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே டெக்ரானின் 18-வது மாவட்டத்தில் உள்ள ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அப்பகுதியில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.

    அதேபோல் இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது. டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.

    இதையடுத்து ஈரான் ஏவுகணைகளை நடுவானில் தடுக்க இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. தாக்குதல் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேல் ராணுவம் கேட்டு கொண்டது.

    இந்த நிலையில் இஸ்ரேலைத் தாக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும் டெக்ரான் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தளங்களை குறிவைத்து தாக்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்து உள்ளது.

    ஈரானின் ராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்ரஹிம் மௌசவி கூறும்போது, "இதுவரை எங்கள் ராணுவ நட வடிக்கைகள் வெறும் எச்சரிக்கைகள்தான். மேலும் கடுமையான, தண்டனைக்குரிய தாக்குதல்கள் தொடரக்கூடும். எனவே இஸ்ரேலியர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள டெல் அவிவ் மற்றும் ஹைபாவை விட்டு வெளியேற வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

    மோதல் காரணமாக ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை 3 நாட்களுக்கு மூடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
    • தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 11-ம் தேதி ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் திரவ ஆக்சிஜன் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய தேதி அறிவிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்வார்கள் என்று இஸ்ரோ அறிவித்தது. .

    இந்நிலையில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், நாளை சர்வதேச விண்வெளி மையத்திற்கு மேற்கொள்ள இருந்த பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

    ×