என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
- கிரில் கம்பிகள், தடுப்புகள் மேலே கண்டிப்பாக ஏறக் கூடாது.
- விஜயின் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தோழர்கள் தவிர்க்க வேண்டும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி தவெக தலைமை தொண்டர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை
விஜயின் மக்கள் சந்திப்பிற்கு வரும் தொண்டர்களுக்கு 12 வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
முதியவர், பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணி, கை்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள் விஜய் பரப்புரைக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின்விளக்கு கம்பங்கள், உயரமாக இடங்கள் மேலே ஏற வேண்டாம்.
காவல்துறையின் அறிவுறுத்தல்படி அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும்.
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வருபவர்கள் பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ, நடந்து கொள்ளவோ கூடாது.
சாலையின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடி கட்டப்பட்ட கம்பிகளை உரிய அனுமதியின்றி வைக்கக்கூடாது.
விஜயின் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தோழர்கள் தவிர்க்குமாறும் தவெக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் காவல்துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் எனவும் தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
- ஆளுநர் தேர்தலில் 2ஆம் பிடித்த நிலையில், மேல்சபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
- தோல்வி விரக்தியில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக்கென பதில் கொடுத்து வருகிறது. தகவல் பெறுவதற்காகவே ஏ.ஐ. பயன்படுத்தி வந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த கட்சி ஏ.ஐ.-யை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறிவிட்டார். இதனால் புதிய தலைவர் நியமிக்கப்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், செயற்கை தொழில்நுட்பத்தை (AI) கட்சியின் தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.
The Path to Rebirth என் கட்சி கடந்த ஜனவரியில் ஷிஞ்ஜி இஷிமாரு என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு சிறு நகரின் முன்னாள் மேயர் ஆவார். அந்தக் கட்சி ஒருங்கிணைந்த கொள்கை தளத்தில் செயல்படுவதில்லை. மாறாக அதன் உறுப்பினர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தொடர அனுமதிக்கிறது.
2024 டோக்கியோ ஆளுநர் தேர்தலில், வலுவான ஆன்லைன் பிரசாரத்தின் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தபோது, இஷிமாரு ஆரம்பத்தில் தேசிய கவனத்தை ஈர்த்தார். இருப்பினும், இந்த ஆண்டு மேல்சபை தேர்தலில் அவரின் கட்சி எந்த இடத்தையும் பிடிக்காத நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார்.
எப்படி செயல்படுத்தப்படும் என்பது உட்பட செயற்கை நுண்ணறிவு பற்றிய விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளை AI கட்டுப்படுத்தாது. கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் என அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் அண்மையில் காந்தி கண்ணாடி திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் பாலா மக்களுக்கு அவரால் முடிந்த பல உத்விகளை செய்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் மாற்றம் இயக்கத்தின் மூலமும் பல உதிவிகளை செய்து வருகிறார்.
பெட்ரோல் பங்கில் வேலை செய்த ஊழியருக்கு பைக் வாங்கி கொடுத்தது, முடியாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது என பாலா செய்த விஷயம் வைரலாகி கொண்டே இருந்தது.
இந்நிலையில் பாலாவை சர்வதேச கைக்கூலி என பல விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாலா கொடுத்த ஆம்புலன்ஸ் நம்பரும் பொய்யாக இருப்பதாகவும் அவர் பித்தலாட்டம் செய்து வருவதாகவும் செய்தியாளர் ஒருவர் தொடர்ந்து பாலா மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்த பேட்டி ஒன்று வைரலான நிலையில் பலரின் பணத்தை தான் பாலா இப்படி உதவிகளாக செய்து விளம்பரம் தேடிக் கொள்வதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பாலாவை தொடர்ந்து பலரும் விமர்சிக்க தொடங்கி வருகின்றனர். இது குறித்து பதில் அளித்து இருக்கும் KPY பாலா என்னை சர்வதேச கைக்கூலி என்று கூறுவது எனக்கே அதிர்ச்சியாக தான் உள்ளது. நான் வண்டி வாங்கி தருகிறேன் என்றால் அதை அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்வார்கள். அதற்காகத்தான் வண்டியின் நம்பரை மறைத்துக் கொடுக்கிறேன்.
நான் செய்த உதவிகளுக்கெல்லாம் ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் செய்த நிகழ்ச்சிகள், ப்ரோமோஷன், படங்களில் இருந்து வந்த வருமானத்தில் வைத்து தான் உதவிகள் செய்கிறேன். நான் கட்டி வருவது மருத்துவமனை அல்ல சின்ன கிளினிக் மட்டுமே. அதுவும் நான் வீடு கட்ட வைத்திருந்த நிலத்தில் கட்டி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் பாலாவுடன் இருக்கும் பிரபலங்கள் உதவி செய்பவரின் குணத்தை பாராட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை அவரை இப்படி குறை சொல்வது அதிர்ச்சியாக இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்திய சந்தையில் ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு மாருதி சுசுகி வாகனங்களின் நெக்சா சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு பெற்றுள்ளன.
- பிரீமியம் டீலர்ஷிப்கள் இந்த நன்மைகளை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு வழங்க உள்ளன.
மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வரி விதிப்பில் மாறுதல்களும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்த மாற்றங்கள் ஜிஎஸ்டி 2.0 என அழைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி 2.0 அறிவிப்புக்கு பிறகு பல்வேறு பொருட்களின் விலைகள் மாறியுள்ளன. அதன்படி முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்கள் விலையை குறைத்து வருகின்றன.
இந்திய சந்தையில் ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு மாருதி சுசுகி வாகனங்களின் நெக்சா சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு பெற்றுள்ளன. பிரீமியம் டீலர்ஷிப்கள் இந்த நன்மைகளை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு வழங்க உள்ளன. அதன்படி நெக்சா பிராண்டு மாடல்களின் விலை குறைப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
புதிய விலை விவரங்கள்:
இக்னிஸ் மாடலின் விலை ரூ. 71,300 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5,35,100 என மாறியுள்ளது.
பலேனோ மாடலின் விலை ரூ. 86,100 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5,98,900 என மாறியுள்ளது.
ஃப்ராங்க்ஸ் மாடலின் விலை ரூ. 1,12,600 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 6,84,900 என மாறியுள்ளது.
கிராண்ட் விட்டாரா மாடலின் விலை ரூ. 1,07,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 10,76,500 என மாறியுள்ளது.
எக்ஸ்எல் 6 மாடலின் விலை ரூ. 52,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 11,52,300 என மாறியுள்ளது.
ஜிம்னி மாடலின் விலை ரூ. 51,900 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 12,31,500 என மாறியுள்ளது.
இன்விக்டோ மாடலின் விலை ரூ. 61,700 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 24,97,400 என மாறியுள்ளது.
- திருநெல்வேலி- செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை வெள்ளி, ஞாயிறு நாட்களில் சிறப்பு ரெயில்கள் .
- சென்னை செனட்ரல்- கன்னியாகுமரி இடையே செப்டம்பர் 22, 29, அக்டோபர் 6, 13, 20 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள்.
திருநெல்வேலி- செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை வெள்ளி, ஞாயிறு நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 26, 28, அக்டோபர் 3, 5, 10, 12, 17, 19, 24, 26 ஆகிய நாட்களில் செங்கல்பட்டிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து வாரம் இருமுறை மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
சென்னை செனட்ரல்- கன்னியாகுமரி இடையே செப்டம்பர் 22, 29, அக்டோபர் 6, 13, 20 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். சென்ட்ரலில் ஞாயிறு இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திங்கள் மதியம் 1.50 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கமாக குமரியில் இருந்து செப்டம்பர் 23, 30, அக்டோபர் 7, 14, 21 நாட்களில் மதியம் 3.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரெயில்களுக்கு நாளை முதல் முன்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கேலக்ஸி S24 FE மாடலின் விலை 59,999 ரூபாயில் இருந்து ரூ. 29,999 ஆகக் குறைந்துள்ளது.
- கேலக்ஸி A35 5ஜி ஸ்மார்ட்போன் 30,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 17,999 என குறைந்துள்ளது.
பண்டிகை கால விற்பனையின் அங்கமாக சாம்சங் இந்தியா நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் விலைக் குறைப்பு மற்றும் வங்கி சார்ந்த பலன்கள் வழங்கப்படுகிறது. இவை சாம்சங் நிறுவனத்தின் முதன்மை கேலக்ஸி S24 சீரிஸ் தொடங்கி பட்ஜெட் பிரிவில் கிடைக்கும் கேலக்ஸி F மற்றும் கேலக்ஸி M சீரிஸ் மாடல்கள் என பல்வேறு மாடல்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
சலுகை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ்
கேலக்ஸி S24 சீரிசில் கேலக்ஸி S24 அல்ட்ரா, கேலக்ஸி S24 மற்றும் புதிதாக கிடைக்கும் கேலக்ஸி S24 FE ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கின்றன.
கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் விலை 1,34,999 ரூபாயில் இருந்து தற்போது 97,999 ரூபாய்க்கு கிடைக்கிறது
கேலக்ஸி S24 மாடலின் விலை 74,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 39,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி S24 FE மாடலின் விலை 59,999 ரூபாயில் இருந்து ரூ. 29,999 ஆகக் குறைந்துள்ளது.
பட்ஜெட் பிரிவு ஆப்ஷன்கள்:
சாம்சங் அதன் மிட்-ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் பிரிவுக்கு ஏற்ற கேலக்ஸி A, கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது.
கேலக்ஸி A சீரிஸ்
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் படி, 2024 ஆம் ஆண்டில் தங்கள் பிரிவுகளில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக இருந்த கேலக்ஸி A55 5ஜி மற்றும் கேலக்ஸி A35 5ஜி ஆகியவை தற்போது 42% வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.
கேலக்ஸி A55 5ஜி மாடலின் விலை ரூ. 39,999-இல் இருந்து தற்போது ரூ. 23,999 என குறைக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி A35 5ஜி ஸ்மார்ட்போன் 30,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 17,999 என குறைந்துள்ளது.
கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ்
இளம் பயனர்களை இலக்காகக் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 30% வரை விலைக் குறைப்பு பெற்றுள்ளன.
கேலக்ஸி M36 5ஜி மாடலின் விலை ரூ. 19,999-இல் இருந்து தற்போது ரூ. 13,999 ஆகக் குறைந்துள்ளது.
கேலக்ஸி M16 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,499-இல் இருந்து தற்போது ரூ. 10,499ஆகக் குறைந்துள்ளது.
கேலக்ஸி M06 5ஜி மாடல் ரூ. 9,999-இல் இருந்து தற்போது ரூ. 7,499 என குறைக்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி F36 5ஜி விலை ரூ. 19,999-இல் இருந்து தற்போது ரூ. 13,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி F06 5ஜி மாடலின் விலை ரூ. 9,999-இல் இருந்து ரூ. 7,499 என குறைந்துள்ளது.
புதிய விலை மற்றும் சலுகைகள் சாம்சங் நிறுவனத்தின் AI-சார்ந்த அம்சங்கள் மற்றும் மேம்பட்ட வன்பொருளை அதிக வாடிக்கையாளர்கள் அனுபவிக்க வழி செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் வருகிற 22ஆம் தேதி முதல் கிடைக்கும்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி.
நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
- புதிய ஸ்கூட்டரில் 2.3 kWh LPF பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
- LPF பேட்டரி 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வருகிறது.
கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் மின்சார இருசக்கர வாகன நிறுவனமான ஆம்பியர், இந்தியாவில் மேக்னஸ் கிராண்ட் குடும்ப ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. புதிய மேக்னஸ் கிராண்ட் மாடல் அசத்தலான ஸ்டைல், சௌகரியம், ஆயுள், பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட LFP பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய தரநிலைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.
ஆம்பியர் பிரான்டின் புதிய மேக்னஸ் கிராண்ட் ஸ்கூட்டர் விலை ரூ.89,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆம்பியர் மேக்னஸ் நியோவை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் மேக்னஸ் கிராண்ட், பெரும்பாலான வடிவமைப்பு சிறப்பம்சங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் அதன் புதிய குடும்ப ஸ்கூட்டரை இரண்டு புதிய டூயல் டோன் பிரீமியம் நிறங்கள்- மேட்சா கிரீன் மற்றும் ஓஷன் புளூ ஆகியவற்றுடன், கோல்டு ஃபினிஷ் வழங்கியுள்ளது. மேலும், இது இப்போது வலுப்படுத்தப்பட்ட கிராப் ரெயில், மேம்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம், விசாலமான இருக்கை மற்றும் அதிக சுமை தாங்கும் திறன் ஆகியவற்றுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அம்சங்களைப் பொருத்தவரை, புதிய ஸ்கூட்டரில் 2.3 kWh LPF பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 80-95 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. LPF பேட்டரி 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வருகிறது.
அறிமுகத்தின் போது, கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் நிர்வாக இயக்குனர் விகாஸ் சிங் கூறுகையில், "புதிய மேக்னஸ் கிராண்ட் மாடல் ஆம்பியரின் நிஜ உலக செயல்திறன், பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது. குடும்பங்கள் மற்றும் பயணிகளின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், ஸ்டைல், ஆயுள் மற்றும் உறுதித்தன்மையின் இணக்கமான கலவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்றார்.
- இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும்.
- புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும்.
நாளை (20-ந்தேதி) புரட்டாசி முதல் சனிக்கிழமை. இந்த ஆண்டு வரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் சிறப்புமிக்கவை.
ஜாதக அமைப்பின்படி சனி திசை, புதன் திசை நடப்பவர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என சனியின் பிடியில் இருக்கும் ராசியை சேர்ந்தவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட சகல தடைகள், சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுவையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.
சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8-ல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்சனியென்றும், 12-ல், 1-ல், 2-ல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர்.
இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும். இதைச் சனிதோஷம் என்பர்.
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் குருவின் நிறமாகிய மஞ்சளாடை அணிந்து சந்திரனின் காரகமாகிய உணவினை (தளிகை) சனியின் காரகமாகிய மண்பாத்திரத்தில் இட்டு ஏழுமலையானுக்கு படையலிட தோஷம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமையில் சந்திரனின் காரகமாகிய பச்சரிசி மாவில் சுக்கிரனின் இனிப்பு வெல்ல பாகு மற்றும் ஏலக்காய் சேர்த்து சனியின் எள் சேர்த்து குருவின் நெய்யில் மாவிளக்கு வைத்து வழிபட புணர்ப்பு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும்.

புரட்டாசி சனிக் கிழமையில், பெருமாளை ஆலயம் சென்று தரிசிக்கும் போது, அங்கே நம்மால் முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவதும், அன்னதானம் செய்வதும் மும்மடங்குப் பலனை தந்தருளும்.
புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நாளை ஆலயம் செல்லுங்கள். பெருமாளையும் தாயாரையும் வழிபடுங்கள். கோவிந்தனிடம் குறைகளையெல்லாம் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட திருமணம் முதலான காரியங்களை நடத்தி அருளுவார்கள் பெருமாளும் தாயாரும்!
ஆலயத்துக்கு செல்ல இயலாவிட்டால் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு சிறப்பான மகத்துவம் இருக்கிறது.
- உலக மகளிர் நாள் விழா 2025-ல் நான் கலந்து கொண்டு சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளை வழங்கினேன்.
- 22 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் எடை குறைவு 5.7 விழுக்காடாக குறைந்துள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று (வெள்ளிக்கிழமை) மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான 5-வது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தக் கூட்டத்தில், தீன்தயாள் அந்தியோ தயா யோஜனா, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் கிரிஷி சிஞ்சாயி திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
முத்தமிழறிஞர் கலைஞரால் 1989-ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சுய உதவிக் குழு, இயக்கமாகி இன்று இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசின் "தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்" ஒன்றிய மற்றும் மாநில அரசின் 60:40 என்ற நிதிப்பங்களிப்பின் அடிப்படையில் முதல் 37 ஊரக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் 3.38 லட்சம் சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1.41 லட்சம் சுய உதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில் 55.12 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், 45,312 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதியாக 67 கோடியே 97 லட்சம் ரூபாயும், சமுதாய முதலீட்டு நிதியாக 75,127 சுய உதவிக் குழுக்களுக்கு 801 கோடியே 62 லட்சம் ரூபாயும், நலிவு நிலைக்குறைப்பு நிதியாக 13,546 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு 75 கோடியே 73 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பழங்குடியினரைக் கொண்டு 25,001 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,57,316 நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.
இவற்றில் 17,207 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு 25 கோடியே 81 லட்சம் ரூபாய் சிறப்பு சுழல்நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களின் தடையற்ற செயல்பாடுகளுக்காக நமது அரசு பொறுப்பேற்ற பிறகு இன்று வரை மகளிர் சுய உதவுக் குழு உறுப்பினர்களுக்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 362 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டு உள்ளது என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
2025-2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 3-9-2025 வரை 1,46,100 சுய உதவிக் குழுக்களுக்கு 13 ஆயிரத்து 62 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
உலக மகளிர் நாள் விழா 2025-ல் நான் கலந்து கொண்டு சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளை வழங்கினேன். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அடையாள அட்டைகள் விரைவில் அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் முழுவீச்சில் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
சுய உதவிக் குழு மகளிருக்கு வழங்கப்படும் அடையாள அட்டையின் மூலமாக சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான தூரத்திற்கு விலையின்றி கிராம மற்றும் நகர்ப்புற பேருந்துகளில் எடுத்துச் செல்வது உள்ளிட்ட எண்ணற்ற சலுகைகளைப் பெறலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2021-22-ம் ஆண்டு முதல் 2025-26 வரை ரூபாய் 1,274 கோடி நிதி ஒதுக்கீடு வரப்பெற்று 12,045 பணிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய சிறப்பான ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்டு 9,755 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஒரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருக்கு ஒரு நிதியாண்டிற்கு ரூ.3 கோடி வீதம், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ரூ.702 கோடி ஆண்டொன்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றது.
மாநில அரசே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 3 கோடி ரூபாய் நிதி வழங்குவதால் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை பத்து கோடி ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி வருகிறோம். எனவே, இதனை ஒன்றிய அரசு 10 கோடி ரூபாயாக உயர்த்திட இந்தக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை செய்து அனுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே" நமது முக்கிய நோக்கமாகும்.
* குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்த தமிழ்நாட்டில் செயல்படும் 54 ஆயிரத்து 449 குழந்தைகள் மையங்களில் பயன்பெற்று வரும் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான சுமார் 22 லட்சம் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது. மேலும், சுமார் 5.50 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு வழங்கப்பட்டு தாய்-சேய் ஊட்டச்சத்து நடைமுறை கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் இத்திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
* குழந்தைகள் மையங்களில் 2 முதல் 6 வயதிற்குட்பட்ட சுமார் 10 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வாரம் மூன்று தினங்களுக்கு முட்டைகளும் 1 முதல் 2 வயது வரையிலான 6 லட்சத்து 75 ஆயிரம் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டை வீதம் தாய்மார்கள் மூலம் வீட்டிலேயே வழங்கப்படுகிறது.
* அனைத்து குழந்தைகளுக்கும் 2 செட் வண்ணச்சீருடைகளும் நமது அரசு வழங்குகிறது. அனைத்து மையங்களிலும் 100 சதவீதம் குடிநீர், கழி வறைகள், மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* இதுவரை 3,397 குழந்தைகள் நேய மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
* 6,390 குழந்தைகள் மையங்களை திறன்மிகு குழந்தைகள் மையமாக தரம் உயர்த்தி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* மேலும் 5,582 மையங்கள் தரம் உயர்த்த ஆணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
* நமது அரசின் முனைப்பான செயல்பாடுகளின் விளைவாக தமிழ்நாடு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5ன்படி 25 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் உயரக் குறைபாடு 11.8 விழுக்காடாக குறைந்துள்ளது.
* 14.6 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் மெலிவுத் தன்மை 3.6 விழுக்காடாக குறைந்து உள்ளது.
* 22 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் எடை குறைவு 5.7 விழுக்காடாக குறைந்துள்ளது.
* குழந்தைகளின் வளர்ச்சி வீதம் பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகிறது.
* "ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற மகத்தான திட்டத்தின்படி முதற்கட்டமாக 1,07,006 ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 15-11-2024 அன்று தொடங்கப்பட்டு 76,705 குழந்தைகளுக்குக் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 6 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு 80.6 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர் என்பது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
* நம்முடைய அனைத்து திட்டங்களும் கடைக்கோடியில் உள்ள மக்களையும் சென்றடையும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களிலும் மாநில அரசின் பங்குத் தொகை எவ்வித காலதாமதமுமின்றி விடுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒன்றிய அரசும் தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்கிட வேண்டும் என இக்குழு மூலமாகவே வலியுறுத்தப் படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு செயலாளர்கள் தங்களது துறைவாரியான திட்டங்கள் தொடர்பான கருத்துகளை விளக்கினர். எம்.பி.க்கள் டி.ஆ. பாலு, தொல். திருமாவளவன், கே. சுப்பராயன், மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், துரை வைகோ, நவாஸ்கனி ஆகியோர் தங்கள் கருத்து களை தெரிவித்தனர்.
மேலும், எம்.எல்.ஏ.க்கள், தன்னார்வலர்கள், மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (திஷா) குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
- வருகிற 30ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது.
- இந்தியா முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.
பெண்களுக்கான 50 ஓவர் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா நடத்துகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் கொழும்பு ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற இருக்கிறது. நவம்பர் 2ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது. இந்த நிலையில் ஐசிசி உலக கோப்பைக்கான Anthem-ஐ ஐசிசி வெளியிட்டுள்ளது. இப்பாடலை இந்தியாவின் முன்னணி பின்னணி பாடகியான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கான வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.
தொடக்க விழாவிலும் ஷ்ரேயா கோஷலின் கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்திய பெண்கள் அணி இதுவரை ஐசிசி கோப்பையை வென்றதில்லை. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 98 ரன்னில் தோல்வியடைந்தது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உறுதிப் போட்டிகளில் 9 ரன்களில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.






