என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகிறது.
- தமிழ் தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 2-ம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புனேரி பால்டன்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. புனேரி பால்டன் 8 ஆட்டத்தில் 6 வெற்றி, 2 தோல்வி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அரியானா அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது.
இரவு 9 மணிக்கு நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றி, 5 தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அருள்நந்தா பாபு இணைந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
- திரைத்துறையினரின் படை சூழ, கண்ணீர் மல்க ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.
ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பிற்பகல் 3 மணியளவில் சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
திரைத்துறையினரின் படை சூழ, கண்ணீர் மல்க ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.
அறிமுக இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'. இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் முதல் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் இதனை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- 20 ரூபாய்க்கு கடைக்காரர் 4 பானி பூரி வழங்கியதால் பெண் ஒருவர் விரக்தி.
- 6 வழங்க வேண்டும் என சாலையில் அமர்ந்து போராட்டம்.
வெற்றி ஊர்வலம், அரசியல் பேரணி போன்றவற்றால் சாலையில் போக்குவரத்து நெரிசல், தடை ஏற்படுவதை பார்த்திக்கிறோம். ஆனால், குஜராத் மாநிலம் வதோதராவில் இரண்டு பானி பூரிக்காக பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுர்சாகர் லேக் பகுதியில், சாலையோர கடையில் பெண் ஒருவர் பானி பூரி சாப்பிட சென்றுள்ளார். அப்போது கடைக்காரரிடம் 20 ரூபாய் கொடுத்து பானி பூரி கேட்டுள்ளார். 20 ரூபாய்க்கு 6 பானி பூரி எனக் கடைக்காரர் கூறிவிட்டு, 4 பானி பூரிதான் கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால், அந்த பெண் தனக்கு கூடுதலாக 2 பானி பூரி வேண்டும் என அடம் பிடித்துள்ளார். ஆனால், கடைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால், கடைக்காரரிடம் இருந்து மேலும் 2 பானிபூரி கிடைக்காதது அவரை சங்கடத்தில் ஆழ்த்தியது.
கடைக்காரரிடம் இருந்து தனக்கு நீதி வேண்டும் என நடுசாலையில அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. டூவிலர், காரில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி விசாரிக்க தொடங்கினர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, அவர்கள் அந்த பெண்ணை நடுரோட்டில் இருந்து அப்புறப்படுத்தினர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தும்போது, 20 ரூபாய்க்கு 6 பானிபூரி என்ற நியாயமான வர்த்தகத்தை அமல்படுத்த வேண்டும். அதைவிட ஒன்னுக்கூட குறையக்கூடாது" எனக் கண்ணீர் விட்டு தனது ஆதங்களை வெளிப்படுத்தினார்.
- ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பிற்பகல் 3 மணியளவில் சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
திரைத்துறையினரின் படை சூழ, கண்ணீர் மல்க ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிலையில், ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
- ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார்.
- ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், 'தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு 'மாரி', 'விசுவாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். முன்பு போல உடல் நலமும் தேறினார்.
ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது. 'வெண்டிலேட்டர்' கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.
அவருக்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்னர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ரோபோ சங்கர் மறைவுக்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "ரோபோ சங்கரின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவும், சீனாவும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள்.
- புதிய சந்தைகள், புதிய எரிசக்தி வினியோக ஆதாரங்களை தேட அவர்களை கட்டாயப் படுத்துகிறது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து உள்ளது. உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி உதவி செய்து வருவதாக அமெரிக்கா விமர்சித்து வருகிறது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
மேலும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்படாமல் ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இந்தநிலையில் ரஷிய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல் பலன் அளிக்காது என கூறி உள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு செர்ஜி லாவ்ரோவ் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரஷியா மீது விதிக்கப்பட்ட புதிய தடைகளால் எங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. அந்த காலக்கட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தடைகளை டிரம்பின் முதல் பதவி காலத்தில் விடுக்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகள் இந்த தடைகளை விதித்தபோது இருந்த சூழ்நிலையில் இருந்து நாங்கள் முடிவுகளை எடுக்க தொடங்கினோம்.
இந்தியாவும், சீனாவும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள். எனக்கு பிடிக்காததை செய்வதை நீங்கள் நிறுத்துங்கள், அல்லது நான் உங்கள் மீது வரிகளை விதிப்பேன் என்று அவர்களிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை. இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத் தல்கள் பலன் அளிக்காது என்பது நிரூபணம் ஆகி வருகிறது.
இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் கோரிக்கை களை எதிர்த்து வருகிறது. அந்த நாடுகள் அமெரிக்கா வின் அழுத்தத்தை விட தங்கள் சொந்த தேசிய நலன்களை அடிப்படையாக கொண்ட கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன.
இந்த வரி அச்சுறுத்தல் அந்த நாடுகளின் பொருளா தார வளர்ச்சியை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதோடு மட்டுமல்லாமல் குறைந்த பட்சம் மிகவும் கடுமையான சிரமங்களை உருவாக்குகிறது.
இதனால் புதிய சந்தைகள், புதிய எரிசக்தி வினியோக ஆதாரங்களை தேட அவர்களை கட்டாயப் படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் பதவிகளை ஏபிவிபி பிடித்தது.
- துணைத் தலைவர் பதவிக்கான பேட்டியில் காங்கிரஸ் ஆதரவு NSUI வேட்பாளர் வெற்றி பெற்றார்.
டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க (DUSU) தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 50 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2.75 மாணவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 52 மையங்களில் 195 வாக்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 711 EVMs ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 39.45 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆர்.எஸ்.எஸ்.-யின் மாணவர்கள் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷாத் (ஏபிவிபி- ABVP) முக்கிய பதவிகளை பிடித்தது.
தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவியை பிடித்த நிலையில், காங்கிரஸ் ஆதரவு NSUI துணைத் தலைவர் பதவியை பிடித்தது.
ABVP-யின் ஆர்யன் மான் தலைவர் பதவியில் 28841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். NSUI சார்பில் போட்டியிட்ட ஜோஸ்லின் சவுத்ரி 12654 வாக்குகள் பெற்றார்.
துணைத் தலைவருக்கான போட்டியில் NSUI சார்பில் போட்டியிட்ட ராகுல் ஷன்ஸ்லா 29339 வாக்குகளும், ஏபிவிபி-யின் கோவிந்த் தன்வர் 20547 வாக்குகள் பெற்றனர்.
தலைவர்- ஆர்யன் மான் (ஏபிவிபி)
துணைத் தலைவர்- ராகுல் ஜன்ஸ்லா (NSUI)
செயலாளர்: குணால் சவுத்ரி (ஏபிவிபி)
இணைச் செயலாளர்: தீபிகா ஜா (ஏபிவிபி)
ஆர்யன் மான் ஹரியானா மாநிலம் பஹதுர்காவைச் சேர்ந்தவர். ஹன்ஸ்ராஜ் கல்லூரில் பட்டப்படிப்பு முடித்த இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நுலக அறிவியல் முதுகல பட்டம் படித்து வருகிறார்.
- தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.
- தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல், நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- மூன்று நாள் விழாவிற்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.
- ஸ்கூபா டைவிங்கின்போது திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதால் உயிரிழப்பு
அசாமை சேர்ந்த பிரபல பாடகர் ஜூபீன் கார்க் (வயது 52), சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் போது, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அசாம், பெங்கால், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
இன்று, ஸ்கூபா டைவிங்போது ஜூபின் கார்க்கிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ICU-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் வடகிழக்கு வழாவில் (North East Festival) கலந்து கொள்வதற்கான ஜூபின் கார்க் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
டைவிங் போது மூச்சுவிடத் திணிறானர். இதனால் சிங்கப்பூர் ஜெனரல் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக சிபிஆர் கொடுக்கப்பட்டது. அவரை காப்பாற்ற முயற்சி செய்தபோதிலும், மதியம் 2.30 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது என வடகிழக்கு விழா அமைப்பினர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை தெரிவிப்பது மிகுந்த வர்த்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
இது மிகவும் வேதனையான செய்தி மற்றும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். மேலும், தனது எக்ஸ் பக்கத்தில் "இன்று அசாம் தனது விருப்பமான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. ஜுபீன் மாநிலத்திற்கு செய்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். அவர் மிக விரைவாக சென்றுவிட்டார். இது செல்ல வேண்டிய வயது அல்ல" தெரிவித்துள்ளார்.
- 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்து.
- தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 474 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது.
- ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.






