என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தோழமைக் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து, உரிமைக் குரல் எழுப்பும் மேடை இது.
    • தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஒலிக்கும் மேடையாக இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

    சென்னை கொட்டிவாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோடானு கோடி உடன்புறப்புகளால்தான், மக்களால்தான் நான் முதலமைச்சராக இருக்கிறேன். பேரறிஞர் அண்ணா, கலைஞர் அமர்ந்த இடத்தில் என்னையும் அமர வைத்தது உடன்பிறப்புகள்தான்.

    ஓயாமல் உழைக்கும்போது, பிறந்தநாள் விழாக்கள் சிறிது ஓய்வுக்கான ஸ்பீட் பிரேக்கர்கள் போன்றவை. கோபாலபுரம் பிறந்த இடமாக இருந்தாலும் என்னை வளர்த்தது தமிழ்நாடு.

    தோழமைக் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து, உரிமைக் குரல் எழுப்பும் மேடை இது. தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஒலிக்கும் மேடையாக இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

    பிறந்தநாள் வாழ்த்துக்கான மேடை மட்டுமல்ல, வெற்றி விழா மேடை. 2026 தேர்தல் வெற்றிக்கான தொடக்க விழா மேடை இது.

    விரிசல் விழாதா என எண்ணிக் காத்திருப்பவர்கள் ஆசையில் மண் தான் விழும். கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுபாடு வரும் ஆனால் விரிசல் வராது.

    2021ல் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழ்நாட்டின் உரிமைகள் தரை மட்டமாகி இருக்கும். 

    தமிழ்நாட்டிற்கான எந்த நன்மையையும் மத்திய பாஜக அரசு செய்வதில்லை. தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு பார்த்து பார்த்து வஞ்சிக்கிறது.

    புதிய கல்விக் கொள்கையை திணிப்பதை ஏற்க மறுப்பதால் நிதி தர மறுக்கிறது மத்திய அரசு. பெயர்தான் தர்மேந்திர பிரதான், ஆனால் அவரிடம் தர்மமே இல்லையே.

    தேவைப்பட்டால் நாங்கள் பல மொழியை கற்றுக் கொள்வோம் எங்கள் மீது இந்தியை திணிக்க வேண்டாம். இந்தி திணிப்பால் மைத்ரி, மகதி உள்ளிட்ட மொழிகள் அழிக்கப்பட்டது.

    எங்களை எப்படி மிரட்டினாலும் இந்தியை திணிக்க முடியாது. மிரட்டினால் கூழைக் கும்பிடு போன நாங்கள் என்ன அடிமை அதிமுகவா ?

    தமிழ்நாட்டின் தொகுதிகளை, பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. பிரச்சனை எழுப்பியவுடன் பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டுக்கு தொகுதிகள் குறையாது என்கிறார்கள்.

    மார்ச் 5ல் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக கலந்து கொள்வது மகிழ்ச்சி. நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை மற்ற மாநிலங்களுக்கு காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
    • இதன்மூலம் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    லாகூர்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. செடிகுல்லா அடல் 85 ரன்னிலும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 67 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் துவார்ஷியஸ் 3 விக்கெட்டும், ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 274 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது. தொடக்கமே ஆப்கானிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கால் 2 கேட்ச்சுகளை தவறவிட்டனர். மேத்யூஸ் ஷாட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் அரை சதம் எடுத்தார். அப்போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    • வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
    • வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகி விளக்கம் அளிக்க முடிவு.

    நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகவில்லை.

    இதையடுத்து, சீமான் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும், தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் நாளை (இன்று) போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். அடுத்த வாரம் ஆஜராவேன் என்று சீமான் நேற்று தெரிவித்து இருந்தார்.

    சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகி விளக்கம் அளிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.

    ஆனால், போலீசாரின் அறிவிப்புபடி இரவு 8 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதாக சீமான் தெரிவித்திருந்தார்.

    சேலத்தில் இருந்து இன்று சென்னை வந்த சீமான் வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு மேல் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் புறப்பட்டார்.

    இதனால், வடபழனியில் காவல் நிலையத்திற்கு செல்லும் வழியிலேயே கார் தடுத்து நிறுத்தப்பட்டது. பிறகு, 9 மணியளவில் சீமான் மீண்டும் காவல் நிலையம் நோக்கி புறப்பட்டார்.  

    இந்நிலையில், நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான வழக்கில் சீமான் விசாரணைக்கு ஆஜரானார்.

    • கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில், வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது , “பைரதி ரணகல்” படம்,
    • வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவான படம் தான் “பைரதி ரணகல்”.

    கீதா பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில், வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற , ஆக்சன் அதிரடி திரைப்படமான "பைரதி ரணகல்" படம், இப்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

    பிரம்மாண்ட வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவான படம் தான் "பைரதி ரணகல்". இப்படம் தான் தமிழில் சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் "பத்து தல" படமாக வெளியானது என்பது குறிப்பிடதக்கது.

    மஃப்டி படத்தில், பைரதி ரணகல் எனும் டான் கதாப்பத்திரத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவாராஜ்குமார் நடித்திருந்தார். இந்தக் கதாப்பத்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, அந்த கதாப்பாத்திரத்தின் முன் கதையை மையமாக வைத்து உருவான படம் தான் "பைரதி ரணகல்".

    ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்த பைரதி ரணகல், எப்படி நாடே திரும்பிப் பார்க்கும் டானாக மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் கதை. அதிரடி ஆக்சன் படமாக, கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    நடிகர் சிவராஜ்குமார், முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ராகுல் போஸ், ருக்மணி வசந்த், அவினாஷ், சாயா சிங், தேவராஜ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஆகாஷ் ஹிரேமத் பணியாற்றியுள்ளார்.

    ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாரட்டுக்களைக் குவித்த இப்படம், கன்னட மொழியில், திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, ஓடிடி வெளியீட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில், இப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருகிறது.

    "பைரதி ரணகல்" திரைப்படத்தை SUN NXT தளத்தின் மூலம் அனைவரும் பார்த்து ரசியுங்கள்!! 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கணவரின் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
    • கழுத்து பகுதியில் ரசாயனத்தை ஊசி மூலம் செலுத்தி குப்பைத் தொட்டி பகுதியில் தூக்கி வீசினர் என புகார்.

    உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் விகாஸ் தியாகி என்பவர் திருமணம் ஆகாமல் பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். விகாஸ் தியாகியுடன் வாழ்ந்த அந்த பெண் கற்பழிப்பு, கொலை முயற்சி என அடுக்கடுக்கான புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் மூன்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

    இறுதியாக கணவரின் நண்பர்கள் தன்னை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பிறப்புறுப்பில் பாட்டிலை திணித்ததாகவும் பரபரப்பு புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோதுதான், புகார் பொய் எனத் தெரியவந்துள்ளது. இதனால் அந்த பெண்ணை போலீசார் கைது சிறையில் அடைத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூன மாதம் அந்த பெண் விகாஸ் தியாகியுடன் லிவ்-இன் தொடர்பில் இருந்துள்ளார். விகாஸ் தியாகியின் வீடு காசியாபாத்தில் உள்ள கவி நகரில் உள்ளது. தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கற்பழித்ததாக விகாஸ் தியாகி மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அந்த நேரத்தில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், பாலியல் கொடுமை செய்ததுடன், வயிற்றில் எட்டி உதைத்ததால் கருவில் குழந்தை இறந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

    தன்னுடைய புகாரில் இதை தொடர்ந்து கூறி வந்துள்ளார். ஆனால், நீதிபதி முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்த போது தன்னுடைய புகாரில் கூறியதில் இருந்து மாற்றி தெரிவித்துள்ளார். எங்களுடைய உறவு சம்மதத்துடன்தான் நடைபெற்றது. தியாகி என்னை அடிக்க மட்டுமே செய்தார். ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் மருத்துவர்கள் கூறிய அறிவுரைகளை கடைபிடிக்காததால் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஆகஸ்ட் மாதம் ஜூன் மாதம் கொடுத்த வழக்கில் தனது வாக்குமூலத்தை மாற்றுமாறு போலீஸ் நிலையத்தை அணுகியுள்ளார். அப்போது தியாகி, அவரது மைத்துனர் மற்றும் ஒரு நண்பர்களில் ஒருவர் தன்னை மிரட்டி, அவர்களுக்கு சாதமாக வாக்குமூலம் அளிக்க வைத்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

    பின்னர் அதேமாதம் போலீசாரை அணுகி, தான் தியாகியை திருமணம் செய்து கொண்டதாகவும், முன்னதாக தான் அளித்த புகார அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே விசயத்தை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

    4 மாதம் கழித்து கடந்த ஜனவரி மாதம், அங்கீகாரம் இல்லாத திருமணம் தியாகி மற்றும் அந்த பெண்ணுடைய தாயார் நடத்தி வைத்ததாகவும், திருமணம் ஆசைவார்த்தி கூறி தன்னை கற்பழித்ததாகவும் புகார் அளித்துள்ளார். மேலும், தியாகி தன்னை அடித்து உதைத்ததுடன், மதுபானத்தை ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் புகார் அளித்துள்ளார். அத்துடன் தியாகி மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் 2-ஆவது முறையாக போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

    போலீசார் விசாரணை நடத்தியபோது கூட்டு பாலியல் வன்கொடுமை அந்த பெண்ணின் குற்றச்சாட்டு பொய் எனத் தெரிய வந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் தீக்காயத்திற்கான ஆதாரம் இருந்துள்ளது. இதனால் கடந்த 17-ந்தேதி தியாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தான் மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, தியாகியின் நண்பர்கள் தன்னை கடத்தி சென்றதாகவும், தான் சுயநினைவு இழக்கும் வகையில் மர்ம் பொருள் அடங்கிய ஊசி செலுத்தியதாகவும், பின்னர் அவர்கள் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் தன்னுடைய கழுத்துப் பகுதியில் ஏதோ ரசாயன பொருளை செலுத்தியதாகவும், அத்துடன் தன்னுடைய பிறப்புறுப்பில் பாட்டிலை செலுத்தியதாகவும், அதன்பின்னர் தன்னை அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் தூக்கி வீசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை நடைபெற்றது தெரிவித்துள்ளார்.

    போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்றதாக கூறிய இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் இருந்து இரவு 8.30 மணிக்கு வெளியேறியதும், பின்னர் காரில் இருந்து இறங்கி வீட்டிற்கு 10.19 மணிக்கு வந்ததும் தெரியவந்துள்ளது. அவருடயை வீட்டிற்கு சாதாரணமாக செல்வதுபோல் சென்றது தெரியவந்தது.

    தியாகி நண்பர்கள் அந்த நேரத்தில் எங்கிருந்தார்கள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்தனர். அப்போது அவர்கள் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடங்களில் இல்லை எனத் தெரிய வந்தது. இதற்கிடையே மருத்துவ பரிசோதனையில், ரசாயன பொருளை அவரே அவர் மீது ஊற்றியது தெரியவந்தது.

    பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. பின்னர் ஏதோ திட்டத்துடன் தியாகி நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

    • நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிதான் அவர் கேப்டனாக செயல்படும் கடைசி போட்டியாகும்.
    • இங்கிலாந்தின் அடுத்த கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    லண்டன்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் - பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

    அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடைந்த தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக (ஒருநாள் + டி20) செயல்பட்டு வந்த பட்லர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிதான் அவர் கேப்டன் பதவி வகிக்கும் கடைசி போட்டி என கூறப்படுகிறது. கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகியதை அடுத்து இங்கிலாந்தின் அடுத்த கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசினார்.
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைக்கப்பட்டுள்ளது.

    சிறுமி கத்தியதால் கல்லை எடுத்து தலையிலும் முகத்திலும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சிறுவன் தப்பியுள்ளான்.

    பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.

    இந்த நிலையில், சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசினார்.

    குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, "16 வயது சிறுவனின் முகத்தில் 3 வயது சிறுமி எச்சில் துப்பியது தான் வன்கொடுமைக்கு காரணம்" என மாவட்ட ஆட்சியர் பேசிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    • சட்டவிரோத ஊடுருவல் தேசிய பாதுகாப்பு குறித்த விவகாரம்.
    • இதை கடுமையான வகையில் அணுக வேண்டும்.

    டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அந்த கட்சியின் முதல் முறை பெண் எம்.எல்.ஏ.-வான ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். தற்போது முதல் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    டெல்லியில சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கு மத்திய அரசுதான் காரணம் என தேர்தல் பிரசாரத்தின்போது ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கடுமையாக குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லி மாநில சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா, உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர், ரோஹிங்கியாவினருக்கு உதவும் நெட்வொர்க்கிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி போலீஸ்க்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், டெல்லியில் மாநிலங்களுக்கிடையிலான சட்டவிரோத கும்பலை ஒழிப்பதற்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும். மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என போதைப்பொருள் வழக்கு, பொதைப்பொருள் நெட்வொர்க்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

    வங்கதேசத்தினர், ரோஹிங்கியாவினர் சட்டவிரோதமாக இந்தியாவில் வந்து தங்கவும், அவர்களுக்கு இங்கே வசதிகள் பெற்றுக்கொண்டு ஆவணங்கள் உருவாக்கும் கும்பலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டவிரோத ஊடுருவல் தேசிய பாதுகாப்பு குறித்த விவகாரம் ஆகும். இதை கடுமையான வகையில் அணுக வேண்டும். அவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும்.

    கட்டுமானம் தொடர்பான விசயங்கள், 2022 கலவர வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர டெல்லி போலீசார் அனுமதி தேவையில்லை. அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து, வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    கூடுதல் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை டெல்லி காவல்துறை விரைவில் தொடங்க வேண்டும். டிசிபி (DCP) அளவிலான அதிகாரிகள் காவல் நிலையங்களுக்குச் சென்று, பொது விசாரணை முகாம்களை நடத்தி, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக புதிய பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில் டெல்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார்.
    • கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்?

    3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை நியாயப்படுத்தும் வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம்.

    விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
    • குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு  ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டீசர் காட்சிகள் அட்டகாசமாக அமைந்துள்ளது. அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லாஸ்லியா மற்றும் யூடியூப் பிரபலமான ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கர் இணைந்து நடித்துள்ள படம் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'.
    • கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தொடர் 'சுழல் 2'.

    திரையரங்கிள் வாரந்தோறும் பல திரைப்படங்கள் வெளிவந்தாலும். திரைப்படங்களை ஓடிடியில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் வாரந்தோறும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். திரையரங்கிள் வெளியாவதை விட ஓடிடியில் வாரந்தோறும் அதிக திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளிவருகிறது. அந்த வகையில் இந்த வார ஓடிடி-யில் என்னென்ன திரைப்படங்களும் சீரிஸ்களும்

    'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா மற்றும் யூடியூப் பிரபலமான ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கர் இணைந்து நடித்துள்ள படம் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'. கடந்த 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த நிலையில், இப்படம் கடந்த 25-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'சுழல் 2'

    கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தொடர் 'சுழல் 2'. மேலும் நடிகை கவுரி கிஷன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இணைந்து இயக்கியுள்ள இந்த வெப் தொடர்அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. இத்தொடர் புஷ்கர் - காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ளனர்.

    'பிளட் அண்ட் பிளாக்'

    குரு கார்த்திகேயன் எழுதி இயக்கிய திகில் திரைப்படம் பிளட் அண்ட் பிளாக் . இப்படத்தில் சுகி விஜய் மற்றும் யானி ஜாக்சன் நடித்துள்ளனர். இந்த படத்தை ப்ளூ வேல் என்டர்டெயின்மென்ட்ஸ் பதாகையின் கீழ் ஹரி கிருஷ்ணன் வாசுதேவன் தயாரித்துள்ளார். இப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    'பராரி'

    ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பராரி' . இயக்குனர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வழங்கியுள்ளார். ஆதிக்க சாதி - ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் வாழ்வியலின் உணர்வுபூர்வமான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    'சங்கராந்திகி வஸ்துன்னம்'

    பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. இதில் மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், உபேந்திரா லிமாயி, சாய்குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    'ஆபரேஷன் ராவன்'

    வெங்கட சத்யா எழுதி இயக்கிய திரில்லர் திரைப்படம் 'ஆப்ரேஷன் ராவன்'. இப்படத்தில் ரக்ஷித் அட்லூரி மற்றும் சங்கீர்த்தன விபின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு சைக்கோ கொலையாளியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த நிலையில், இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோடை விடுமுறைக்கு முன்பே தொடக்கப்பள்ளிகளில் 60,000 மாணவர்கள் சேர்ந்தனர்.
    • அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை.

    அரசுப் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது.

    அங்கன்வாடி மையத்தில் முன்பருவக் கல்வி முடிந்த குழந்தைகளில் ஒருவரைக் கூட விடாமல், அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டும் தனியார் பள்ளிகளைப் போல மார்ச் முதலே மாணவர் சேர்க்கையை தொடங்கியதால், கோடை விடுமுறைக்கு முன்பே தொடக்கப்பள்ளிகளில் 60,000 மாணவர்கள் சேர்ந்தனர்.

    அதிக மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதற்காக, கல்வித் துறையில் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×