என் மலர்
தலைப்புச்செய்திகள்
- யார் மீதும் விருப்பு, வெறுப்பு இன்றி செயல்படுகின்ற கட்சி அமமுக.
- 2026-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, உணர்வு ரீதியாக விஜய் ஏற்படுத்துவார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரம் மேலும் கூறியதாவது:-
யூகங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம். நான் எப்போதும் எதார்த்தமாக, நம்புவதை பேசக்கூடியவன். யார் மீதும் விருப்பு, வெறுப்பு இன்றி செயல்படுகின்ற கட்சி அமமுக. யாரை பார்த்தும் எங்களுக்கு பொறாமை இல்லை.
இன்றைக்கு கட்சி ஆரம்பிக்கும்போது ஒருவரை அண்ணன், தம்பி என்று சொல்வது, அதற்கு பிறகு அவர்களை ரோட்டில் நின்று திட்டுவதெல்லாம் எங்களுக்கு தெரியாது.
எங்களை விமர்சிப்பவர்களுக்கு பதில் விமர்சனம் கொடுப்போம். மற்றபடி, எங்களுக்கு யாரை பார்த்தும் பொறாமை கிடையாது.
விஜய் அவர்களை பார்த்து அந்த கருத்தைதான் சொன்னேன். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பிரபலமான நடிகர் உச்சத்தில் இருக்குமபோதே அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்கள் மத்தியில் அதனால் ஏற்படுகின்ற தாக்கம் தேர்தலில் ஏற்படும்.
2026-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, உணர்வு ரீதியாக விஜய் ஏற்படுத்துவார் என்று சொல்வது எனது அனுபவத்தில் சொல்வது.
அதற்காக, நீங்கள் விஜயுடன் கூட்டணிக்கு போவீர்களா என்றால், அதைப்பற்றி எல்லாம் நான் முடிவு செய்யவில்லை.
நாங்கள் அமமுக இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். உறுதியாக வெற்றிப்பெறக் கூடிய கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோம். இது தான் எங்கள் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதல் நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது.
இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்தார்.
இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார் ஹர்ஷத் கான்.
இந்நிலையில் கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து `ஆரோமலே' படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒரு முன்னோட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு பையன் அவனின் வாழ்க்கை , நட்பு, காதல், வெவ்வேறு பருவத்தில் வேறு வேறு காதல் என காட்சிகள் அமைந்துள்ளது.
இந்த படத்தை சாரங் தியாகு இயக்க. சித்து குமார் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
- இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வதற்காக ஆபத்தான முறையில் இளைஞர்கள் பயணம்
- ஓடும் காரின் உள்ளே இருந்துகொண்டு, காரின் மேற்கூறையில் இளைஞர் ஒருவர் ஏற முயன்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வதற்காக பார்த்திபனூர் பகுதியில் ஆபத்தான முறையில் பேருந்து மற்றும் கார்களில் பயணித்த இளைஞர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் பார்த்திபனூர் அருகே ஓடும் காரின் உள்ளே இருந்துகொண்டு, காரின் மேற்கூறையில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர், தவறி சாலையில் விழுந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, பின்னே வந்த வாகனம் உடனடியாக பிரேக் அடித்ததால், அந்த இளைஞர் நூலிழையில் உயிர்தப்பினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் வெள்ளி திரையில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
இப்படத்திற்கு குமாரசம்பவம் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒரு ஃபீல் குட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தை இசையை அச்சு ராஜமணி மேற்கொள்ள, ஒளிப்பதிவு ஜெகதீஷ் செய்துள்ளார்.
இந்நிலையில், குமாரசம்பவம் படத்தின் இட்லி வடை என்ற ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
- பெங்களூரு சிவாஜிநகரில் அமையவிருக்கும் மெட்ரோ நிலையத்திற்கு செயின்ட் மேரி பெயர் வைக்க சித்தராமையாக பரிந்துரை.
- நேருவின் காலத்திலிருந்தே மராட்டிய வீர மன்னரை அவமதிக்கும் பாரம்பரியத்தை காங்கிரஸ் தொடர்கிறது என பாஜக கண்டனம்.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா சிவாஜிநகரில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது சிவாஜிநகரில் வரவிருக்கும் மேட்ரோ நிலையத்திற்கு செயின்ட் மேரி என பெயர் சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார். ஏற்கனவே மறைந்த நடிகரும், இயக்குனருமான சங்கர் நாக் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், சித்தராமையா இவ்வாறு கூறியிருந்ததற்கு கடும் விமரச்னம் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் பாஜக-வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடகா பாஜக தலைவர்கள் மட்டுமல்ல. மகாராஷ்டிரா மாநில தலைவர்கள் கூட, மகாராஜா சிவாஜியை இழிவுப்படுத்துவதாக குற்றம்சாடடியுள்ளனர்.
"சித்தராமையாவின் இந்த பரிந்துரைக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். பெங்களூருவின் சிவாஜிநகர் மெட்ரோ நிலையம் செயின்ட் மேரியாக பெயர் மாற்றுவது சத்திரபதி சிவாஜி மகாராஜாவை இழிவுப்படுத்துவதாகும். 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற புத்தகத்தில் சிவாஜி மகாராஜாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த நேருவின் காலத்திலிருந்தே மராட்டிய வீர மன்னரை அவமதிக்கும் பாரம்பரியத்தை காங்கிரஸ் தொடர்கிறது.
எல்லாம் வல்ல இறைவன் சித்தராமையாவுக்கு அத்தகைய முடிவை எடுக்காமல் இருக்க புத்தியைக் கொடுக்க வேண்டும்" என மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
சிவாஜிநகர் என்ற பெயரை நீக்குவார்களா? அவர்கள் வரம்பு மீறக்கூடாது. காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வாக திருப்திப்படுத்தல் மாறிவிட்டது. ஏனென்றால், திருப்திப்படுத்தல் அரசியல் காரணமாக அவர்களின் கட்சி நாய்களிடம் சென்றது. ஆனாலும், அவர்கள் சமாதான அரசியலைப் பேணி வருகின்றனர். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக மாநில சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் சல்வாடி நாராயணன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில மேலவை உறுப்பினர் சித்ரா வாக், "சிவாஜி மகாராஜா மீதான காங்கிரசின் வெறுப்பு தற்போது வெளிப்படுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரிஸ்வான் பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் மெட்ரோ நிலையத்தின் பெயரை செயின்ட் மேரி நிலையமாக மாற்ற கோரிக்கை வைத்துள்ளார். சித்தராமையா மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மகாராஷ்டிரா காங்கிரஸ் இது குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமா, அல்லது அமைதியாக இருக்குமா?" எனத் தெரிவித்துள்ளார்.
- என்னுடைய பேர குழந்தைகளுடன் அமர்ந்து பாடம் படிப்பேன்.
- ஆங்கிலம் மட்டும் தான் எனக்கு சற்று கடினமாக இருந்தது.
கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த பி.டி.கோபிதாஸ் என்ற முதியவர் 80வது வயதில், பிளஸ் 2க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
1957ல் 5ம் வகுப்பு முடித்த கோபிதாஸ் அதன்பிறகு பள்ளிக்குச் செல்லவில்லை. பின்னர் பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளா அரசின் கல்வியறிவு திட்டம் குறித்து அறிந்து 7, 10ம் வகுப்புகளுக்கான படிப்பில் கோபிதாஸ் தேர்ச்சி பெற்றார்.
பிளஸ் 2க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் பேசிய கோபிதாஸ், "பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தாலும் நான் தினமும் எதையாவது படித்துக்கொண்டு தான் இருப்பேன். அதனால் மீண்டும் பள்ளி பாடப்புத்தகங்களை படிப்பது எனக்கு சிரமமாக இருக்கவில்லை. ஒருநாளைக்கு 2 மணிநேரம் படிப்பேன். என்னுடைய பேர குழந்தைகளுடன் அமர்ந்து பாடம் படிப்பேன். ஆங்கிலம் மட்டும் தான் எனக்கு சற்று கடினமாக இருந்தது.
நான் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது என் அம்மாவின் கனவு. அதை நிறைவேற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடைய ஆசிரியர்கள் உட்பட பலரும் என்னை தொடர்ந்து படிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதனால் சட்டம் படித்து வழக்கறிஞராக விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
கோபிதாஸுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், தற்போது அவர் தனது இளைய மகள் மற்றும் அவர்களது இரண்டு பேராகுலந்திகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.
- மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், விஜயின் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர்," விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" என்று கூறினார்.
மேலும் சீமான் கூறியதாவது:- நான் இப்போது மக்களை சந்திக்கிறேன். எந்த போராட்டத்தில் நான் பங்கேற்காமல் இருந்திருக்கிறேன்.
மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.
மக்களை சந்திக்கிறது என்பது ரோடு ஷோ நடத்துறது இல்ல. கூட்டி வெச்சு பேசிட்டு போறது. மக்களை சந்திக்கிறது என்றால் மக்களின் பிரச்சனைகளை மக்களுக்காக மக்களோடு நிக்கிறது தான் மக்களை சந்திக்கிறது.
அப்படி சந்திக்கிறீர்களா? மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும்.
இது வேட்டையாட வர சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து படக்குழு இப்படத்தை இந்தி மொழியில் கடந்த 5 ஆம் தேதி வெளியிட்டனர்.
இந்நிலையில், லோகா திரைப்படம் உலகளவில் 202 கோடி ரூபாய் வசூலித்துள்ளது . வேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த 2 ஆவது மலையாள சினிமா என்ற சாதனையை லோகா திரைப்படம் படைத்துள்ளது.
இந்நிலையில் IMDB-வலைத்தளத்தில் இந்த வார பிரபலமான இந்திய திரைப்பிரபலங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இரண்டாம் இடத்தில் ஷாருக்கான் இருக்கிறார்.
- முன்னாள் தலைமை நீதிபதி இடைக்கால பிரதமராக பதவி ஏற்க வாய்ப்பு இருந்தது.
- தற்போது அவருக்குப் பதிலாக இன்ஜினீயரை போராட்டக்குழுவினர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்.
அரசியல் தலைவர்களின் ஊழல்களை எதிர்த்து இளைஞர்கள் ஜென் இசட் போராட்டங்கள் (Gen Z protests) என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் நேபாளம் அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவித்தது.
இதனால் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பாராளுமன்றம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு தீவைத்தனர். வன்முறை மற்றும் துப்பாக்கி சூட்டில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரழந்தனர்.
போராட்டம் எதிரொலியால் ஜனாதிபதி, பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் இடைக்கால அரசு அமைத்து உடனடியான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவம் இதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
நேற்று முன்னாள் தலைமை நீதிபதியான சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
ஜென் இசட் பேராட்டம் குழுக்கள் ஆலோசனை நடத்தி காத்மாண்டு மேயர் பலேந்த்ரா பலேன் ஷா மற்றும் சுஷிலா கார்கி ஆகியோர் பெயர்களை பரிசீலனை செய்துள்ளது.
முதல் தேர்வு காத்மாண்டு மேயர் பலேந்த்ராவாகத்தான் இருந்துள்ளார். ஆனால், இவர் இடைக்கால அரசின் தலைவராக இருக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, தற்காலிய கட்டுப்பாட்டில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ராணுவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கீசிங் என்பவரை இடைக்கால பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. குல் மான் கீசிங் நேபாளத்தின் மின்சார நெருக்கடியை சமாளித்த திறமையான என்ஜினீயர் ஆவார். இவர் தேசப்பற்று கொண்டவர். எல்லோருக்கும் பிடித்தமானவர் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கியை போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. முன்னாள் நீதிபதிகள் பிரதமராக வருவதை அரசியலமைப்பு தடை செய்கிறது என்றும், 73 வயதில் அவர் 'மிகவும் வயதானவர்' என்றும் அவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால இடைக்கால தலைவரை நியமிப்பதில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
நேபாள அரசியலமைப்பின்படி, ஒரு கட்சியை சேர்ந்தவர், அவருக்கு மெஜாரிட்டி இருக்கும் பட்சத்தில் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அப்படி இல்லை என்றால், ஜனாதிபதி நியமனம் செய்வார். அல்லது எதாவது எம்.பி. முன் முயற்சி மேற்கொண்டு, நம்பிக்கை வாக்கெடுப்பபை எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.
- அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
- உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓணம் பண்டிகையை அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள்.
- இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
எர்ணாகுளத்தில் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் பேசிய பினராயி விஜயன், "மத்திய அமைச்சர் அமித் ஷா அண்மையில் கேரளா வந்திருந்த போது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 25% வாக்கினை பெற வேண்டும் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதைபாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். கேரளா பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளது என்பதை அவரின் பேச்சு தெளிவுபடுத்துகிறது.
ஓணம் பண்டிகை நாளில் வாமனனுடன் மகா விஷ்ணுவையும், வாமனனின் காலடியில் மகாபலியையும் சித்தரிக்கும் செய்தியை ஒருவர் எனக்கு காட்டினார். இதன் பொருள், மகாபலி நம்மைப் பார்ப்பதாக நம்பப்படும் ஒரு பண்டிகையான ஓணத்தையே அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள். இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும்" என்று தெரிவித்தார்.
பிரபல ஓடிடி தளங்களில் சோனி லிவ் முக்கியமானதாகும். பல ஒரிஜினல் வெப் தொடர்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். முக்கிய மலையாள திரைப்படங்களையும் சோனி லிவ் கைப்பற்றியுள்ளது.
சோனி லிவ் வெப் தொடர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான தி ஹண்ட், மாயசபா போன்ற வெப் தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் திரைப்படங்கள், வெப் தொடர்கள், ஷோக்கள் என அனைத்தையும் தெரிவிக்கும் வகையில் சோனி லிவ் ஓடிடி தளம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரசிகர்களுக்கு பிடித்த ஷோக்களின் அடுத்த சீசன்களின் அறிவிப்பு:
ஸ்காம் 1992 மற்றும் ஸ்காம் 2023 வெற்றி தொடர்களை தொடர்ந்து ஹன்சல் மேத்தா ஸ்காம் 2010 என அடுத்த சீசனை இயக்கியுள்ளார்.
மகாராணி சீசன் 4, ஃப்ரீடம் அட் மிட்நைட் சீசன் 2, குல்லாக் சீசன் 5 மற்றும் அந்தேகி சீசன் 4 வெளியாக இருக்கிறது.
தமிழில்
Sethurajan IPS
தமிழ் திரையுலகில் நடனக்கலைஞர், நடிகர் பிரபுதேவா, OTT-வில் முதல் முறையாக IPS அதிகாரி வேடத்தில் அறிமுகமாகிறார். இயக்குனர் ரஃபிக் இஸ்மாயில் இயக்கும் இந்த அரசியல் பின்புலக் கொலை மர்மத் திரில்லர், சமூக மற்றும் அரசியல் சதிகள் கலந்த கதை மாந்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Free Love
மிர்னாலினி ரவி நடிப்பில், இயக்குனர் அப்பாஸ் அஹ்மது இயக்கும் Free Love, சாதாரண காதலைத் தாண்டி சமூக நெறிமுறைகளுக்கு சவால் விடுக்கும் தனிச்சிறப்பான காதல் கதையை மையமாகக் உருவாகியுள்ளது.
Theevinai Pottru
சத்யராஜ் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா லெக்ஷ்மி தனது முதல் தமிழ் OTT படமாகவும் வரும் Theevinai Pottru, ஊர் சூழலில் நடைபெறும் கொலை மர்மம் அடிப்படையிலான திரில்லராக உருவாகியுள்ளது
The Madras Mystery – Fall of a Superstar
நஸ்ரியா பாஹத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த வரலாற்று குற்றப் படைப்பு, சினிமா சூப்பர்ஸ்டார் ஒருவரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது. ஹிஸ்டாரிக்கல் கிரைம் டிராமா பாணியில் வெளியாகும் இந்த வலைத் தொடர் அதிக கவனம் பெற்றுள்ளது.
Kuttram Purindhavan – The Guilty One
இயக்குனர் செல்வமணி இயக்கத்தில், பசுபதி நடிக்கும் Kuttram Purindhavan, குற்றம், தண்டனை மற்றும் உண்மையான குற்றவாளி யார்? என்ற கேள்வியைச் சுற்றி நகரும் திகில் திரில்லர். லக்ஷ்மிப்ரியா, சந்திரமௌளி மற்றும் விதார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Telugu OTT
Brinda Season 2
வெற்றி பெற்ற திரில்லர் Brinda வின் இரண்டாம் பாகத்தில், த்ரிஷா மீண்டும் வருகிறார். இயக்கம்: சூர்யா மனோஜ் வாங்களா.
Black and White – Rise of the Shadow
ஜகபதி பாபு முன்னணி கதாபாத்திரத்தில், திகில் கலந்த த்ரில்லர்-டிராமா.
இந்த வரப்போகும் வெளியிட்டால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.






