search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    17 வயது சிறுமியை திருமணம் செய்து தாயாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
    X

    17 வயது சிறுமியை திருமணம் செய்து தாயாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

    • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
    • மோனிஷ் மீது சிறுமியின் பெற்றோர் புளியந்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த பெரிய குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மோனிஷ் (வயது 22) தனியார் நிறுவன ஊழியர்.

    இவருக்கும் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தனிக்குடித்தனம் நடத்தினார்கள். இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். அதற்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இதற்கிடையே சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் அவர் தனது பெற்றோருடன் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு 18 வயதானது. எனவே தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் மோனிசிடம் கேட்டார். ஆனால் அவர் திருமணம் செய்து சேர்ந்து வாழ மறுத்தார்.

    இதையடுத்து மோனிஷ் மீது சிறுமியின் பெற்றோர் புளியந்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    போலீசார் அங்கு சென்று மோனிசை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×