search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில் மறியல் போராட்டம்: கல்லூரி மாணவர்கள் 3 பேர் மீது வழக்கு
    X

    ரெயில் மறியல் போராட்டம்: கல்லூரி மாணவர்கள் 3 பேர் மீது வழக்கு

    • மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 3 மாணவர்கள் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சென்னை:

    மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் பாரத், சவ்ரவ் திவாரி, மோகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரெயிலை இவர்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்சார ரெயில் சிறிது நேரம் அங்கு நின்றது. மாணவர்களை ரெயில்வே போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இது தொடர்பாக 3 மாணவர்கள் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் எழும்பூரில் உள்ள ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் சென்றனர்.

    Next Story
    ×