search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதல் முறையாக பீரங்கி படையில் பெண்கள்
    X

    முதல் முறையாக பீரங்கி படையில் பெண்கள்

    • இந்திய ராணுவத்தில் போர்முனைகளுக்கு செல்லும் பீரங்கி படையில் பெண் அதிகாரிகளும் இடம் பெறுகிறார்கள்.
    • பீரங்கி படையை பொறுத்த வரை போர் முனைக்கு சென்று தாக்குதலில் ஈடுபடுவது.

    சென்னை:

    மிக கடினமான ராணுவ பணியிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள்.

    இந்திய ராணுவத்தில் போர்முனைகளுக்கு செல்லும் பீரங்கி படையில் பெண் அதிகாரிகளும் இடம் பெறுகிறார்கள்.

    இந்த அதிகாரிகளுக்கான பயிற்சி சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடந்தது. இதில் பயிற்சி பெற்ற 5 பெண் வீராங்கனைகள் வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்து பீரங்கி படையில் பொறுப்பேற்க உள்ளார்கள்.

    பீரங்கி படையை பொறுத்த வரை போர் முனைக்கு சென்று தாக்குதலில் ஈடுபடுவது. இனி பெண் அதிகாரிகளும் பீரங்கி படையை போர்முனைக்கு வழி நடத்தி செல்வார்கள். இந்திய ராணுவத்தின் பீரங்கி படையில் சேரும் முதல் அணியினர் இந்த 5 பெண்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீராங்கனைகளின் வீரத்தையும் நெஞ்சுறுதியையும் கடினமான பயிற்சியை உறுதியுடன் மேற் கொண்டதையும் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

    Next Story
    ×