search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வளநாடு அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து ஊராட்சி பணியாளர் பலி
    X

    வளநாடு அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து ஊராட்சி பணியாளர் பலி

    • விபத்தில் பழனிசாமியின் கால் ஒன்று கருகி துண்டானது. மேலும் இந்த சம்பவத்தில் பசுமாடு ஒன்றும் மின்சாரம் தாக்கி இறந்தது.
    • தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மருங்காபுரி வளநாடு அருகே உள்ள கண்ணுக்குழி கல்லாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 54). இவர் அந்த ஊராட்சியில் தண்ணீர் திறப்பாளராக (வாட்டர் போர்டு ஆப்பரேட்டர்) வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அவரது வீட்டின் அருகே நள்ளிரவில் உயரழுத்த மின்கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து அங்குள்ள இரும்பு கம்பி வேலியின் மீது விழுந்தது. இதில் அந்த கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இது தெரியாமல் கம்பி வேலியை தொட்ட பழனிசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இந்த விபத்தில் பழனிசாமியின் கால் ஒன்று கருகி துண்டானது. மேலும் இந்த சம்பவத்தில் பசுமாடு ஒன்றும் மின்சாரம் தாக்கி இறந்தது.

    மேற்கண்ட சம்பவம் தெரியாமல் அவரது குடும்பத்தினர் இரவு தூங்கினர். காலையில் பழனிசாமியும், பசு மாடும் உடல் கருகி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினர். பின்னர் இதுகுறித்து வளநாடு போலீசாருக்கும் மின்வாரியத்தினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்த மருங்காபுரி தாசில்தார் மற்றும் வருவாய்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×