search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்- தினகரன் வேண்டுகோள்
    X

    போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்- தினகரன் வேண்டுகோள்

    • பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பயணங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
    • பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றால் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

    எனவே தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, பொதுமக்கள் பொங்கல் பண்டிகையின் போது எவ்வித சிரமமுமின்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×