என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஜி.எஸ்.டி.வரியை நீக்காவிட்டால் கடையடைப்பு போராட்டம்- வணிகர் பேரமைப்பு கூட்டத்தில் முடிவு
- அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
- வணிகர்கள் தங்கள் வணிகத்தை சிரமமின்றி நடத்திட தமிழக அரசு மற்றும் அதிகாரிகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியது.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் லயாலி குளோபல் குசின் ரெஸ்ட்டா ரண்டில் வணிகர்கள் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள், பழைய பொருள் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல்செய்துள்ள அபி டெவிட்படி தடுப்பூசி, முகக்கவசம் போன்றவை கட்டாயம் அல்ல என்பதால், மாநில அரசு மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அபராதம், தண்டனை போன்றவற்றை நீக்கி விழிப்புணர்வை அதிகப்படுத்தி வணிகர்கள் தங்கள் வணிகத்தை சிரமமின்றி நடத்திட தமிழக அரசு மற்றும் அதிகாரிகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியது.
கூட்டத்தின் முடிவில் பெறப்பட்ட ஆலோசனையின்படி, செஸ்வரி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கைகளைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்துவது எனவும், ஜி.எஸ்.டி வரி சம்பந்தமாக மத்திய நிதி அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு எட்டப்படாவிட்டால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்ட அறிவிப்பு தேதி வெளியிடப்படும் என முடி வெடுக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி பிரச்சினைக்கு தீர்வுகள் காணப்படாவிட்டால், நாடு தழுவிய அளவில் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்