search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் கைது
    X

    செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் கைது

    • மத்திய புலனாய்வு அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் அண்ணாநகரில் உள்ள பாஸ்கரின் வீட்டுக்கு சென்றனர்.
    • வருவாய் புலனாய்வு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பாஸ்கரிடம் நீண்ட நேரமாக விசாரணை நடத்தப்பட்டது.

    சென்னை:

    சசிகலாவின் உறவினரான பாஸ்கர் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார்.

    இவர் நடத்தி வரும் பர்னிச்சர் கடையில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக பாஸ்கர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆந்திர போலீசார் பாஸ்கர் பதுக்கி வைத்திருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் அண்ணாநகரில் உள்ள பாஸ்கரின் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவரிடம் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

    விசாரணைக்கு பின்னர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். தி.நகரில் உள்ள வருவாய் புலனாய்வு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பாஸ்கரிடம் நீண்ட நேரமாக விசாரணை நடத்தப்பட்டது.

    இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பாஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக்கின் மாமனார்தான் பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×