search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 16 மோட்டார் சைக்கிள்களை திருடிய கொள்ளையன் கைது
    X

    திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 16 மோட்டார் சைக்கிள்களை திருடிய கொள்ளையன் கைது

    • திருமங்கலம், மதுரை காளவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியுள்ளார்.
    • 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து ராஜபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை உசிலம்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார். அதன்படி உசிலம்பட்டி டி.எஸ்.பி நல்லு மேற்பார்வையில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசாரின் விசாரணையில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது மதுரை மாவட்டம் பேரையூர் பாறைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் ராஜபாண்டி (வயது 22) என்பது தெரியவந்தது. அவர் உசிலம்பட்டி, எழுமலை, பேரையூர், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், மதுரை காளவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியுள்ளார். மேலும் திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலும் ராஜபாண்டி மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார். அவரிடம் இருந்து 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து ராஜபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் ராஜபாண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பல இடங்களில் கைவரிசை காட்டிய மோட்டார் சைக்கிள் திருடனை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வெகுவாக பாராட்டினார்.

    Next Story
    ×