search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் நள்ளிரவில் மீனவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
    X

    தூத்துக்குடியில் நள்ளிரவில் மீனவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

    • நள்ளிரவில் மீனவர் வீட்டின முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் பாஸ்கர் என்ற சுறா பாஸ்கர் (வயது 38). மீனவர். இவர் இனிகோநகர் பகுதி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்து வருகிறார். இவரது அண்ணன் பீட்டர் (48) மீனவர். இருவரது வீடும் அடுத்தடுத்து உள்ளது.

    நேற்று மாலை அவர்களது வீட்டு அருகே விளையாடிய சிறுவர்களுக்கு இடையே தகராறு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணிக்கு சகோதரர்களான பீட்டர், பாஸ்கர் ஆகிய இருவரது வீட்டு வாசல்களிலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர்.

    குண்டு வெடித்த சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து எழுந்து வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் வாசல் அருகே இருந்த மீன் பிடிக்கும் வலைகள் தீப்பற்றி எரிந்தது.

    உடனடியாக தண்ணீர் எடுத்து தீயை அணைத்தனர். எனினும் தீ பற்றி எரிந்ததில் மீன்பிடி வலைகள் முழுவதும் சேதம் அடைந்தன. இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்பாகம் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மீனவர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டை வீசி சென்றது யார்? எதற்காக வீசினார்கள்? நேற்று மாலை சாலையில் நடைபெற்ற தகராறு காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் மீனவர் வீட்டின முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×