search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- போலீசார் விசாரணை
    X

    பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- போலீசார் விசாரணை

    • காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆணை விழுந்தான் குளத்தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 26). இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில மாணவரணி இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 1:30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் வீட்டு கதவில் இருந்த திரைச்சீலை மட்டும் எரிந்தது.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஸ்ரீகாந்திற்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே வெளியே வந்து பார்த்து தீ பிடித்து எரிந்த திரைச்சீலை அணைத்தார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    பின்னர் இது குறித்து ஸ்ரீகாந்த் பட்டுக்கோட்டை நகர போலீசுக்கு தகவல் அளித்தார். அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் தெரியவில்லை. ஸ்ரீகாந்திற்கு வேறு யாருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததா? அல்லது வேறு காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×