search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.ம.மு.க. கட்சி செயற்குழு 20-ந் தேதி கூடுகிறது: பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து டி.டி.வி. தினகரன் ஆலோசனை
    X

    அ.ம.மு.க. கட்சி செயற்குழு 20-ந் தேதி கூடுகிறது: பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து டி.டி.வி. தினகரன் ஆலோசனை

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழக அலுவலகத்தில் அன்று காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்கும்.
    • கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் டி.டி.வி. தினகரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை இப்போதே தொடங்கி விட்டது.

    வாக்காளர் பட்டியலை வீடு, வீடாக சரி பார்ப்பது, புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது, வாக்கு சாவடி வாரியாக பி.எல்.ஏ. 2 முகவர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இப்போதே செய்து வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி கூட்டணி குறித்தும் இப்போதே முடிவு செய்து அதற்கேற்ப தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற 20-ந் தேதி கூட்டியுள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழக அலுவலகத்தில் அன்று காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர், மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், முன்னாள் எம்.பி. எஸ்.அன்பழகன், சி.ஆர்.சரஸ்வதி, அம்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வான திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் எஸ்.வேதாசலம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் டி.டி.வி. தினகரனை சந்தித்த பிறகு நடைபெறும் செயற்குழு என்பதால் கட்சியின் எதிர்கால நிலவரம் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    அதே போல் முக்கிய நிர்வாகிகள் பலர் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு செல்வதால் அதை தடுத்து நிறுத்துவது பற்றியும், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் டி.டி.வி. தினகரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி சேருவது என்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் டி.டி.வி. தினகரன் ஆலோசிக்க உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×