search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நந்தனத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி- மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
    X

    நந்தனத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி- மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

    • ஏ.டி.எம். உள்ளே இருந்து 2 மர்ம நபர்கள் வெளியே ஓடினர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலை நந்தனம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அலுவலகத்தின் தரை தளத்தில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல் பட்டு வருகிறது.

    நேற்றிரவு ஏ.டி.எம்.மில் இருந்து திடீரென சத்தம் வந்துள்ளது. அதனை கேட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காவலாளி சிவக்குமார் முதல் தளத்தில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தார்.

    அப்போது ஏ.டி.எம். உள்ளே இருந்து 2 மர்ம நபர்கள் வெளியே ஓடினர். உள்ளே சென்று பார்த்த போது ஏ.டி.எம். எந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த காவலாளி, வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதனைதொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். காவலாளி சரியான நேரத்தில் வந்ததால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது. தேனாம்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×