என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மூலக்கொத்தளத்தில் ரெயில்வே சுரங்க பாதையில் மழை நீரில் சிக்கிய மாநகர பஸ்
- சுரங்க பாதையில் பஸ் சென்ற போது தேங்கியுள்ள மழை நீரில் பஸ் சிக்கிக் கொண்டது.
- மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மூலக்கொத்தளம் ரெயில்வே சுரங்கபாதையில் விடிய விடிய பெய்த மழையால் மழை நீர் தேங்கி உள்ளது. இன்று காலை சென்னை செங்குன்றத்தில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது.
மூலக்கொத்தளம் சுரங்க பாதையில் பஸ் சென்ற போது தேங்கியுள்ள மழை நீரில் பஸ் சிக்கிக் கொண்டது. பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டு வேறு ஒரு பஸ்சில் அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் தண்ணீரில் சிக்கிக் கொண்ட பஸ்சை வாகனம் மூலம் இழுத்து அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
#WATCH | Tamil Nadu: A bus from Chennai MTC was stuck in a subway in Moolakkothalam, Chennai.
— ANI (@ANI) November 22, 2023
With the efforts of the Transport Department and Corporation workers, the bus was later removed from there. pic.twitter.com/nrcG4IRjiG
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்