search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரம் ஓட்டலில் இன்று இரவு விளையாட்டு வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருந்து அளிக்கிறார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மாமல்லபுரம் ஓட்டலில் இன்று இரவு விளையாட்டு வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருந்து அளிக்கிறார்

    • செஸ் விளையாட்டுக்காக 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மாமல்லபுரம் செல்கிறார்.

    சென்னை:

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செஸ் விளையாட்டுக்காக 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    அங்கு வருகை புரியும் வீரர்களுக்காக பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மாமல்லபுரம் செல்கிறார்.

    அங்கு அழகுற நிறுவப்பட்டுள்ள கலை நயமிக்க நினைவு தூணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு ரேடிசன் ஓட்டலில் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்து கொடுக்கிறார்.

    இதில் பங்கேற்குமாறு ஏராளமான வீரர்கள், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×