search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜயதரணியை அழைக்காமல் விட்டுவிட்டேன்- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கிண்டல்
    X

    விஜயதரணியை அழைக்காமல் விட்டுவிட்டேன்- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கிண்டல்

    • இளங்கோவன் பதவி ஏற்பு விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.வை தவிர எந்த எம்.எல்.ஏ.வும் கலந்து கொள்ளவில்லை.
    • ஒருவேளை மீண்டும் பதவி ஏற்கும் சந்தர்ப்பம் வந்தால் முதன்மையாக அந்த அம்மையாரை தனியாக சென்று கூப்பிடுவேன்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்பு விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.வை தவிர எந்த எம்.எல்.ஏ.வும் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி விஜயதரணி எம்.எல்.ஏ. பரபரப்பான கருத்தை கூறியிருந்தார். இது பற்றி இளங்கோவன் கூறியதாவது:-

    விஜயதரணிக்கு தனியாக அழைப்பிதழ் அனுப்பி இருக்க வேண்டும். தவறு செய்துவிட்டேன். அவரை நேரில் சந்தித்து வருத்தத்தை தெரிவித்து, ஒருவேளை மீண்டும் பதவி ஏற்கும் சந்தர்ப்பம் வந்தால் முதன்மையாக அந்த அம்மையாரை தனியாக சென்று கூப்பிடுவேன் என்று நக்கலுடன் பதிலளித்தார்.

    Next Story
    ×