என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையில் அமலாக்கத்துறை 13 இடங்களில் அதிரடி சோதனை- ரூ.225 கோடி நிதி மோசடி எதிரொலி
- சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மேற்கு தாம்பரம், கோடம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை உள்பட 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
- இன்று காலை 7 மணியளவில் ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் சோதனை தொடங்கியது.
சென்னை:
சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டர் என்பவருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனம் ரூ.225 கோடி வங்கி நிதியை மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிதி மோசடியில் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறையும் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஜேம்ஸ் வால்டர் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆரோக்கிய சாமி ஜேம்ஸ் வால்டர் நிறுவனத்தில் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மேற்கு தாம்பரம், கோடம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை உள்பட 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டரின் நிறுவனம் தொடர்பான அலுவலகங்கள், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
இன்று காலை 7 மணியளவில் ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் சோதனை தொடங்கியது.
ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டர் வீடு மற்றும் நிறுவனம் அண்ணாநகரில் ஒருவரது வீட்டின் மாடியில் செயல்பட்டுள்ளது. அதன் பிறகு சமீபத்தில் அமைந்தகரைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்