என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்- ராதாகிருஷ்ணன் தகவல்
- டெங்கு தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.
- வீட்டுக்கு உள்ளேயே நல்ல தண்ணீரில் டெங்கு கொசு இருக்கும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெங்கு தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். கொசு நல்ல தண்ணீரில் முட்டையிடும் போது 3 நாட்களுக்குள் புழுக்களாக மாறி விடும். அது 8 நாட்களில் கியூபாவாக மாறி விடும். 21 நாட்களுக்குள் லட்சக்கணக்கான முட்டைகள் புழுக்களாக மாறி லட்சக்கணக்கில் கொசுக்கள் வருகிறது.
அதனால்தான் பன்முக நடவடிக்கையாக சுகாதாரத்துறை வீட்டுக்கு வீடு சென்று பார்வையிட்டு கொசு உற்பத்தியாவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொசு ஒழிப்பு பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சாக்கடை, குப்பையில் இதர நோய் வருவது போல் வீட்டுக்கு உள்ளேயே நல்ல தண்ணீரில் டெங்கு கொசு இருக்கும். அதே போல் கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதிகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. அவற்றை பார்வையிட்டு கொசு ஒழிப்பு பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
எனவே வீட்டிற்குள் டெங்கு கொசு உற்பத்தியாவதை மக்களும் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்