search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்
    X

    சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

    வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    அந்த வகையில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதே போன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    Next Story
    ×