என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மின்சார ரெயில்களில் பெண்கள் பெட்டியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த திட்டம்
- ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் போலீஸ் ஒருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பெண்கள் பெட்டியில் பயணித்த ஒருவரை வெளியேற்றிய போது பெண் போலீஸ் தாக்கப்பட்டார்.
சென்னை:
சென்னை-புறநகர் பகுதி மக்களை இணைக்கும் பாலமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 4 வழித்தடத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படுகிறது.
சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி, கடற்கரை-வேளச்சேரி ஆகிய மார்க்கத்தில் தினமும் 680 ரெயில்கள் இயக்கப்படுகிறது. சுமார் 8 லட்சம் பயணிகள் மின்சார ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இதில் 3 லட்சம் பேர் பெண்கள்.
மின்சார ரெயில்களில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பெண்கள் பெட்டியில் முன்பகுதியில் ஒரு பெண் போலீசும், பின்பகுதியில் ஒரு பெண் போலீசும் இரவு நேரத்தில் பணியில் இருந்து வருகிறார்கள்.
ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் போலீஸ் ஒருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் பெட்டியில் பயணித்த ஒருவரை வெளியேற்றிய போது பெண் போலீஸ் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மின்சார ரெயில்களில் இரவு நேரத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பை தீவிரப்படுத்த ரெயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
பாதுகாப்பில் ஈடுபடும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தங்களை தற்காத்து கொள்ள கூடுதலாக பாதுகாப்பு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கலாமா என்று ரெயில்வே பாதுகாப்பு படை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்யும் போது அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார ரெயில்களில் உள்ள அனைத்து பெண்கள் பெட்டியிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தினால் குற்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதோடு அதில் ஈடுபடக் கூடியவர்களை எளிதில் கண்டுபிடித்து தண்டிக்க முடியும்.
அதன் அடிப்படையில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. படிப்படியாக எல்லா மின்சார ரெயில்களிலும் கேமரா பொருத்துவதன் மூலம் பெண்கள் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த முடியும் என்று ரெயில்வே துறை கருதுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்