என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மின் இணைப்புடன் 2.95 லட்சம் பேர் ஆதாரை இணைக்கவில்லை
- இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் நேற்று வரை 98.05 சதவிகிதம் பேர் ஆதாருடன் இணைத்துள்ளனர்.
- மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் இருந்தாலும் மின் கட்டணம் செலுத்துவதில் எவ்வித சிரமும் ஏற்படாது என்று மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்கும் பணி நவம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாதத்தில் இருந்து மின் அலுவலகங்களில் நேரடியாக இணைக்கும் பணி நடந்தது. 100 சதவிகிதம் இணைக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்ற இலக்கோடு நடைபெற்று வரும் இந்த பணி வருகிற 28-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் நேற்று வரை 98.05 சதவிகிதம் பேர் ஆதாருடன் இணைத்துள்ளனர். இன்னும் 1.5 சதவீதம் பேர் மட்டுமே இணைக்க வேண்டும். அதாவது 2 லட்சத்து 95 ஆயிரம் பேர் இணைக்க வேண்டியுள்ளது. 3 நாட்களில் இந்த பணி நிறைவடையும். அதன் பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் இருந்தாலும் மின் கட்டணம் செலுத்துவதில் எவ்வித சிரமும் ஏற்படாது என்று அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்