search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின் இணைப்புடன் 2.95 லட்சம் பேர் ஆதாரை இணைக்கவில்லை
    X

    மின் இணைப்புடன் 2.95 லட்சம் பேர் ஆதாரை இணைக்கவில்லை

    • இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் நேற்று வரை 98.05 சதவிகிதம் பேர் ஆதாருடன் இணைத்துள்ளனர்.
    • மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் இருந்தாலும் மின் கட்டணம் செலுத்துவதில் எவ்வித சிரமும் ஏற்படாது என்று மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்கும் பணி நவம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாதத்தில் இருந்து மின் அலுவலகங்களில் நேரடியாக இணைக்கும் பணி நடந்தது. 100 சதவிகிதம் இணைக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்ற இலக்கோடு நடைபெற்று வரும் இந்த பணி வருகிற 28-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் நேற்று வரை 98.05 சதவிகிதம் பேர் ஆதாருடன் இணைத்துள்ளனர். இன்னும் 1.5 சதவீதம் பேர் மட்டுமே இணைக்க வேண்டும். அதாவது 2 லட்சத்து 95 ஆயிரம் பேர் இணைக்க வேண்டியுள்ளது. 3 நாட்களில் இந்த பணி நிறைவடையும். அதன் பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் இருந்தாலும் மின் கட்டணம் செலுத்துவதில் எவ்வித சிரமும் ஏற்படாது என்று அவர் கூறினார்.

    Next Story
    ×