என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திரிபுரா மாநிலத்தில் இருந்து ரெயிலில் 18 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது
- திரிபுராவை சேர்ந்த இவர்களிடமிருந்து 9.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- செம்பியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பரத், மதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
திரிபுரா மாநிலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது ரெயில் பெட்டியில் சந்தேகத்துக்கிடமாக இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களது பெயர் சபியுல்லா, இஸ்மாயில் என்பது தெரிய வந்தது.
இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் 18 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுகந்தா தாஸ், பிரசென்ஜித் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். திரிபுராவை சேர்ந்த இவர்களிடமிருந்து 9.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பரத், மதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிட மிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்