search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பஸ்களில் 1.85 கோடி பேர் பயணம்
    X

    அரசு பஸ்களில் 1.85 கோடி பேர் பயணம்

    • பண்டிகை காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
    • விரைவில் 1,666 புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் தொலை தூரப்பயணங்களுக்காக பலர் அரசு பஸ்களை பயன்படுத்தி வந்தாலும், தனியார் பஸ்களுடன் போட்டிபோடும் அளவுக்கு அரசு பஸ்களின் கட்டமைப்பு மற்றும் பயண நேரம் இல்லாததால் பெரும்பாலானவர்கள் தனியார் பஸ்களில் பயணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அரசு பஸ்களின் கட்டமைப்புகள், பயண நேரம் உள்ளிட்டவற்றில் போக்குவரத்துக்கழகம் அதிக கவனம் செலுத்தி வருவதால் சமீபகாலமாக அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதிலும் பண்டிகை காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இது தவிர சிறப்பு பஸ்களுடன் முன்பதிவில்லா பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

    இதன்படி, நிகழாண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 1.85 கோடி பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்திருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. 2022 அக்டோபரில் 1.67 கோடி பேர் அரசு பஸ்களில் பயணித்திருந்த நிலையில், நிகழாண்டு 18 லட்சம் பேர் அதிகமாக பயணித்துள்ளனர். விரைவில் 1,666 புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×