search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைன் ரம்மிக்கு தடை- நாளை முக்கிய முடிவு எடுக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    ஆன்லைன் ரம்மிக்கு தடை- நாளை முக்கிய முடிவு எடுக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தல்
    • சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனையடுத்து ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி 701 பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக முதல் அமைச்சரிடம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்கல் செய்தது.

    இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை இயற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×