search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குரும்பூர் அருகே முதியவர் அடித்துக்கொலை- மகன் கைது
    X

    குரும்பூர் அருகே முதியவர் அடித்துக்கொலை- மகன் கைது

    • சென்னையில் கூலி தொழில் செய்து வந்த சுடலை மணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார்.
    • ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள சோனாகன்விளையை சேர்ந்தவர் முத்து. (வயது 80). இவரது மனைவி ரோஜா (65). இவர்களது மகன் சுடலைமணி (48).

    சென்னையில் கூலி தொழில் செய்து வந்த சுடலை மணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். அதன்பிறகு அவர் பெற்றோருடன் தங்கி இருந்துள்ளார். நேற்று முத்துவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது தொடர்பாக ரோஜாவுக்கும், சுடலைமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த சுடலைமணி தாய் ரோஜாவை கீழே கிடந்த கட்டையால் தாக்கி உள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து மகனை தடுத்தார். அப்போது சுடலைமணி கட்டையால் தந்தையையும் சரமாரியாக தாக்கினார். இதில் முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடனே சுடலைமணி அங்கிருந்து தப்பியோடி விட்டார். ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொலை குறித்து தகவலறிந்ததும் குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி தப்பியோடிய சுடலைமணியை கைது செய்தனர்.

    தந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறு காரணமாக முத்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×