search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வானூர் அருகே அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்த முதியவர் பலி- பொதுமக்கள் சாலை மறியல்
    X

    வானூர் அருகே அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்த முதியவர் பலி- பொதுமக்கள் சாலை மறியல்

    • சரவணன் வேலைக்கு சென்று விட்டு அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • கிளியனூர் மற்றும் வானூர் பகுதியில் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே கோவடி பஜன கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 60) கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று சரவணன் வேலைக்கு சென்று விட்டு அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல் மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் (38) கூலி தொழிலாளி. இவரும் நேற்று அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மயங்கி கீழே விழுந்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு சம்பவங்களை குறித்து தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பஜன கோவிலை சேர்ந்த சரவணன் இறந்ததை தொடர்ந்தும், அவரது உறவினர்கள் இன்று காலை புதுவையில் இருந்து திண்டிவனம் செல்லும் நான்கு வழி சாலையில் கோவடி மெயின் ரோட்டில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கிளியனூர் மற்றும் வானூர் பகுதியில் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. சாராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது.

    Next Story
    ×