search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து 19 செம்மறி ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு
    X

    இறந்து கிடக்கும் ஆடுகளை படத்தில் காணலாம்

    ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து 19 செம்மறி ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு

    • விவசாயி வீட்டின் அருகே கொட்டகை அமைத்து அங்கு 29 ஆடுகள் வளர்த்து வந்தார்.
    • ஆடுகளை கடித்து குதறியது சிறுத்தையா? அல்லது ஓநாய்களா? என வருவாய்த்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ராமன் நகர் அருகே உள்ளது புதுவேலமங்கலம் கிராமம்.

    இந்த கிராமம் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இங்குள்ள மக்கள் விவசாயம், கால்நடைகள் வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் ஆகியவற்றை பிரதானமாக கொண்டுள்ளனர்.

    இந்த கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு செட்டி (வயது 60), விவசாயி. இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். தற்போது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து அங்கு 29 ஆடுகள் வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு இந்த ஆட்டு பட்டியில் மர்ம விலங்கு ஒன்று புகுந்து ௧௯ ஆடுகளை கடித்து குதறியது. இதில் 13 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. இதில் பெரும்பாலான ஆடுகளுக்கு கழுத்து பகுதியில் கடித்து குதறப்பட்டிருந்தது. இதில் 6 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த ஆடுகளுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த ஆடுகளை கடித்து குதறியது சிறுத்தையா? அல்லது ஓநாய்கள் சூழ்ந்து கடித்து குதறியதா? என வருவாய்த்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×