என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதால் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலும் பல இடங்களில் பரவி வருகிறது.
- டெங்கு பரவாமல் தடுக்க தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.
சென்னை:
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலும் பல இடங்களில் பரவி வருகிறது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரும் மாதங்களில் அதிக மழை பொழிவு இருக்கும் என்பதால் நோய்களை பரப்பும் கொசுக்கள் மற்றும் லார்வா உற்பத்தியை அழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள் என பொது இடங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மழை நீர் தேங்காத வகையில் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இது சம்பந்தமாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் டெங்கு பரவாமல் தடுக்க தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றும் குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து வினியோகம் செய்வது, நிலவேம்பு குடிநீர் வினியோகிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக உள்ளதால் இங்குள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற வந்தால் அதுகுறித்த விவரங்களையும் சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்