search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்பாட்டை ஒழிக்க என்ன நடவடிக்கை?- ரெயில்வே நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி
    X

    பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்பாட்டை ஒழிக்க என்ன நடவடிக்கை?- ரெயில்வே நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி

    • நீதிபதிகள் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான கொள்கையை சமர்ப்பிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நாளை வரை அவகாசம் வழங்கினர்.
    • பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவை அமல்படுத்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான கொள்கையை சமர்ப்பிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நாளை (வியாழக்கிழமை) வரை அவகாசம் வழங்கினர். பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பயன்பாட்டை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்தனர்.

    Next Story
    ×