என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
4 இருளர் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கு- விழுப்புரம் கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் சரண்
- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இன்று விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தி.மண்டபம் கிராமத்தை சேர்ந்த 4 இருளர் இன பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்போதைய திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டுகள் தனசேகரன், கார்த்திக்கேயன், பக்தவச்சலம் ஆகியோர் மீது புகார் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சீனிவாசனை தவிர மற்ற 4 பேரும் சென்னை ஐகோர்ட்டு மூலம் ஜாமீன் பெற்றனர்.
ஆனால் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அப்போது அவர் தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவினை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு விழுப்புரம் பகுதியை சேர்ந்ததால் அங்கு சரண் அடைந்து ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டார்.
அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இன்று விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்