search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மனைவியை கத்தரிகோலால் 20 முறை குத்திய கணவர்... குடும்ப தகராறில் விபரீதம்
    X

    மனைவியை கத்தரிகோலால் 20 முறை குத்திய கணவர்... குடும்ப தகராறில் விபரீதம்

    • ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வரும் வெங்கடேசனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.
    • கணவன்-மனைவி சண்டையில் சத்யாவின் அலறல் குரல் கேட்டு அருகில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

    ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வரும் வெங்கடேசனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

    இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. வெங்கடேசன் தனது செல்போனை தருமாறு சத்யாவிடம் கேட்டு உள்ளார். அவர் தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு உண்டானது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கத்தரிக்கோலால் சத்யாவின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். ஆத்திரம் தீர 20 முறை குத்தியுள்ளார். பின்னர் வெங்கடேசன் அவரது வயிற்றை கத்தரிக்கோலால் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    கணவன்-மனைவி சண்டையில் சத்யாவின் அலறல் குரல் கேட்டு அருகில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்யா, வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கத்தரிக்கோலால் வயிற்றில் குத்தியதில் சத்யாவின் குடல் பகுதி கிழிந்துள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×