என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மனைவியை கத்தரிகோலால் 20 முறை குத்திய கணவர்... குடும்ப தகராறில் விபரீதம்
- ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வரும் வெங்கடேசனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.
- கணவன்-மனைவி சண்டையில் சத்யாவின் அலறல் குரல் கேட்டு அருகில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வரும் வெங்கடேசனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.
இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. வெங்கடேசன் தனது செல்போனை தருமாறு சத்யாவிடம் கேட்டு உள்ளார். அவர் தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு உண்டானது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கத்தரிக்கோலால் சத்யாவின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். ஆத்திரம் தீர 20 முறை குத்தியுள்ளார். பின்னர் வெங்கடேசன் அவரது வயிற்றை கத்தரிக்கோலால் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
கணவன்-மனைவி சண்டையில் சத்யாவின் அலறல் குரல் கேட்டு அருகில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்யா, வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கத்தரிக்கோலால் வயிற்றில் குத்தியதில் சத்யாவின் குடல் பகுதி கிழிந்துள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்