search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
    X

    ஒகேனக்கல் அருவி

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

    • ஒகேனக்கலில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்ட தடையானது இன்று 10-வது நாளாக தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 78 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.

    இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்தது.

    இதன் காரணமாக ஒகேனக்கலில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்ட தடையானது இன்று 10-வது நாளாக தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றில் 6-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×