search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் பலி
    X

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் பலி

    • விபத்து ஏற்பட்ட ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
    • ஒவ்வொரு அறையிலும் 3 முதல் 4 தொழிலாளர்கள் வேலைப்பார்த்து வந்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் தலா 3 முதல் 4 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைப்பார்த்து கொண்டிருந்தபோது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு அறைகள் தரைமட்டமாகின.

    தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×