search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மர குடோனில் தீ விபத்து- ரூ.3 லட்சம் மதிப்பிலான கட்டைகள், எந்திரங்கள் எரிந்து சேதம்
    X

    மர குடோனில் தீ விபத்து- ரூ.3 லட்சம் மதிப்பிலான கட்டைகள், எந்திரங்கள் எரிந்து சேதம்

    • அதிகாலை அடுக்கி வைக்கப்பட்ட கட்டையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
    • தீவிபத்துக்கான காரணம் குறித்து மணலி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணலி புதுநகரில் தனியார் மர குடோன் உள்ளது. இங்கு கனரக வாகனத்தில் பொருட்கள் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தும் பேலட் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை அங்கு அடுக்கி வைக்கப்பட்ட கட்டையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மாதவரம், மணலி, கொளத்தூர், எண்ணூர் ஆகிய தீயணைப்பு நிலையத்தில் இருந்து 7 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான கட்டைகள் மற்றும் எந்திரங்கள் எரிந்து சேதமானது. தீவிபத்துக்கான காரணம் குறித்து மணலி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×