search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மனைவி பிரிந்து சென்றதால் அதிக மாத்திரை தின்று வாலிபர் உயிரிழப்பு
    X

    மனைவி பிரிந்து சென்றதால் அதிக மாத்திரை தின்று வாலிபர் உயிரிழப்பு

    • கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்த மணிகண்டன் அதிக வலி மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மேலச்சடையான்குளம் மறவர் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி மீனா (வயது 50). இவர்களது மகன் மணிகண்டன் (25). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும், பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

    நேற்று கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டன், உமாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உமாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அவர் கணவரிடம் கோபித்துக்கொண்டு கைக்குழந்தையுடன் செய்துங்கநல்லூர் அருகே கருங்குளம் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த மணிகண்டன் அதிக வலி மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார். இதனைப்பார்த்த அவரது தாய் மீனாவும் அதிக அளவில் மாத்திரையை சாப்பிட்டு இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

    இன்று காலை அவர்களது வீட்டின் கதவு வெகுநேரமாக திறக்காததால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது இருவரும் மயங்கி கிடந்துள்ளனர்.

    உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மணிகண்டன் இறந்து கிடந்தார். மீனாவை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×